பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பஞ்ச மயான தலங்கள்

பஞ்ச மயான தலம் 01 : கச்சி மயானம் காஞ்சிபுரத்தின் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைந்த்ருக்கும் ஒரு மகா முக்கிய சன்னதிதான் முதல் மயான தலம் இது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் உட்புறத்தில் கொடிமரத்திற்கு வலப்புறம் மேற்கு நோக்கி தனி சந்நிதியாக அமைந்துள்ளது. இக்கோயில் மூலத்தானத்தின் மூலவராக, கச்சி மயானேசுவரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். இவருக்கு மயான லிங்கேசுவரர் எனும் மற்றொரு பெயருமுண்டு இந்த தலத்துக்கும் ஒரு புராணம் உண்டு, அதை பார்க்குமுன் இந்த பஞ்ச மயான தலங்களின் […]

பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்

சப்த ரங்க ஆலயங்களை போலவே மார்கழியில் கூடுதலாக வழிபட வேண்டிய ஆலயங்கள் பஞ்ச கிருஷ்ண தலங்கள் ஐந்து தலங்களில் பகவான் கண்ணன் எப்போதும் தங்கியிருந்து அருள்வழங்குவார் என்பது அன்றே ரிஷிகளுக்கும் மகான்களுக்கும் அவர் கொடுத்த வாக்கு, அதாவது ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவர் எக்காலமும் எந்நேரமும் அருள் வழங்கும் முக்கியமான கிருஷ்ணன் ஆலயங்கள் இவை திருகோவிலூர், திருகண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருகண்ணபுரம் மற்றும் கபிஸ்தலம் வரும் நாட்களில் இந்த ஐந்து ஆலயங்களையும் ஒரு சுற்று பார்க்கலாம், மார்கழியில் […]

சப்த ரங்கம்

மார்கழி மாதம் பகவான் விஷ்ணுவுக்குரியது, பகவானுக்குரிய மாதமான அந்த தனுர் மாதத்தில் திருப்பாவை பாடுவதும், அதிகாலை கோலமிட்டு வழிபாடுகளை செய்வதும் இன்னும் ஏராளமான விரதம் நோன்புகள் இதர வழிகளில் பகவானை இடையறாமல் வணங்குவதும் நல்லது அதே நேரம் அந்த பகவானுக்குரிய, விஷ்ணு பகவானுக்குரிய ஆலயங்களை தேடி வணங்கி நின்றது சாலசிறந்தது முன்னோர்கள் கார்த்திகையில் சிவனை வழிபட சொன்னது போலவே மார்கழியில் விஷ்ணுவினை தவறாமல் வழிபட சொன்னார்கள், இந்த காலகட்டத்தில் சப்த ரங்க ஆலயங்கள் எனும் காவேரியின் இடையில் […]

தச வீரட்டானம்

அட்ட வீராட்டான தலங்கள் போலவே தச வீராட்டான தலங்கள் உண்டு, இந்த பத்து ஆலயங்களும் மேற்கு நோக்கி அமைந்த சிவாலயங்கள் மேற்கு நோக்கி அமைந்த சிவாலயங்கள் வெகு அபூர்வம், அதன் தாத்பரியம் ஆழமானது சனியின் திசை மேற்கு திசை, ஒருவரின் கர்மவினைக்கு கர்ம வினைபடியான வாழ்வுக்கும் சனிபகவானே அதிபதி, சனி ஒருவரின் ஜாதகத்தில் அவரவர் கர்மவினைக்கு தக்கவாறே பலனை வழங்கும் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஆலயங்கள் அந்த கர்மத்தை ஒருவன் சுமக்க வலுசேர்க்கும், அந்த கர்மத்தை சரியாக […]

காளிதாசனின் சாகுந்தலம் : 08

துஷ்யந்தன் அந்த கானகத்தின் ஆசிரமத்தை அரக்கரிடம் இருந்து காக்க வந்துவிட்டான் என்றதும் அந்த தவகுடில் மகிழ்ந்தது, மீண்டும் தர்ப்பை புல் சேகரித்தனர், யாக குண்டம் எழுப்பினர் எங்கும் உற்சாகம் கரைபுரண்டது அப்போது தர்ப்பைபுல் அறுக்க தயாரான பெண் சொன்னாள் “எவ்வளவு வியப்பு?, எவ்வளவு மகிழ்ச்சி?, வல்லாளன் வில்லாளன் துஷ்யந்தனே வந்து நமக்கு காவல் இருக்கின்றான், வலிமையின் மாட்சிக்கு சிகரமான அவனே வந்தபின் நம் பயம் எங்கே போயிற்று? முன்பு இந்த அரக்கரை கண்டால் புலிகண்ட மான்கூட்டம் போல் […]

காளிதாசனின் சாகுந்தலம் : 07

பாகனும் துஷ்யந்தனும் பேசிகொண்டிருக்கையில் ஏவலாள் வந்து மன்னனை வணங்கி இருமுனிவர்கள் அவனை தேடி காண வந்த செய்தியினை சொல்கின்றார்கள் காலத்தை கடத்திடாமல் அவர்களை உடனே வரசொல் என்ற மன்னன், அவர்கள் வந்ததும் எழுந்து வரவேற்றான் அவன் அழகையும் தோற்ற பொலிவினையும் கண்ட முனிவர் இன்னொருவரிடம் சொன்னார் “இவர் தேஜஸ் சூரியன் போல் தகதக்கின்றது ஆனால் கண்குளிர பார்க்கும் நிலவு போல் சுடர்விடுகின்றது தவயோகத்தில் நிறைந்து பழுத்த கணல் போன்ற மேனிகொண்ட முனிவர்க்கும் இவருக்குமான ஒற்றுமைகள் அதிகம், வேறுபாடு […]

காளிதாசனின் சாகுந்தலம் : 06

வேட்டையினை நிறுத்திய துஷ்யந்தன் தொடர்ந்து சொல்கின்றான். “கொடிய காட்டுத்தீ புயல் காற்றோடு சேர்ந்து சுற்றி வளைத்து எரிப்பதைப் போல, வேட்டைக்காக எந்த உயிரையும் தப்ப விடாதபடி காட்டை வளைத்த நம் படைகள் அதனை கைவிட்டு அமைதியாக திரும்பட்டும். சிங்கத்தின் கம்பீரம் போல் மாட்சிமை மிக்கவர்களும், சினம் தவிர்த்தவர்களுமான தூய துறவிகள் வாழுமிடம் இது. அவர்கள் கோபத் தீயினை மூட்டும் வண்ணம் எந்த செயலும் செய்ய கூடாது தளபதியே. துறவிகள் சினம் கொள்ளாதவர் போல் சாந்தமே உருவானவர்களாக தோன்றினாலும், […]

திருமுருகாற்றுப்படை, சரஸ்வதி அந்தாதி நிறைவுக் குறிப்பு

திருமுருகாற்றுப்படை, சரஸ்வதி அந்தாதி என இரண்டையும் இன்று நிறைவு செய்துவிட்டோம் திருமுருகாற்றுபடை தமிழின் ஆதி முருகபக்தி இலக்கியம், அருணகிரிநாதரின் பாடல்கள் பிந்தியவை. நக்கீரரே காலத்தால் மூத்தவர் அவ்வகையில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு தலத்தை நினைந்து அல்லது அங்கு செல்லும் போது படிக்கவேண்டிய பாடல் இது, மிக்க பலன் உண்டு நல்ல பலன்களை தரும் அது கோர்வையான பாடல் என்பதால் 317 அடிகளையும் ஒரே பதிவு அல்லது சில பதிவுகளில் தரமுடியவில்லை நீண்டுவிட்டது, தொடர்ந்து வருபவர் கவனித்திருக்கலாம் […]

காளிதாசன் சாகுந்தலம் : 06

(இப்போது காட்சி கொஞ்சம் மாறுகின்றது, மன்னனை தேடி படைகள் வந்துவிட்டன, அதனால் தவசிகள் குடிலை விட்டு சற்று தள்ளி முகாம் அமைத்து தன் படைகள் மற்றும் சேவகர்களோடு தங்கியிருக்கின்றான் துஷ்யந்த மஹாராஜா அக்காலத்தில் காட்டின் மிருகங்களை கட்டுபடுத்தி மக்களை காக்கவேண்டியது அரச கடமை, இதனால் மன்னர்கள் தங்கள் பரிவாரங்களுடன் காட்டுக்கு செல்வார்கள், அந்த பரிவாரத்தில் சேவக பெண்கள் முதல் படைவரை எல்லாம் உண்டு அப்படி வந்த துஷ்யந்தன் ஒரு மானை விரட்டி இந்த தவசிகள் குடிலுக்கு வந்து […]

திருமுருகாற்றுப்படை : 20

301 முதல் 317 வரையான கடைசி வரிகள். ஆசினி முதுசுளை கலாவ மீமிசைநாக நறுமலர் உதிர ஊகமொடுமாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்றுமுத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்றுநன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியாவாழை முழுமுதல் துமியத் தாழைஇளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புறமடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்கோழி வயப்பெடை இரியக் கேழலொடுஇரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்னகுரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டுஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்றுஇழுமென இழிதரும் அருவிப்பழமுதிர் சோலை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications