சப்த கன்னியர் – 05
வைஷ்ணவி தேவி – நான்காம் கன்னிதெய்வம் “கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்” என குமரகுருபரர் இந்த தேவி பற்றி சொல்கின்றார். அதாவது, கடலை கல்லால் நிரப்பி பாலம் கட்டிச் சென்றவள் என்கின்றார். ராமனின் சக்தியாக இருந்தவள் இவளே என்பது அதன்பொருள். அவ்வகையில் இவள் விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவி என்கின்றார் குமரகுருபரர். அன்னையின் புராணமும் அதைத்தான் சொல்கின்றது, அன்னை விஷ்ணுவின் மார்பில் இருந்து வெளிபட்டாள் என்பது அவளின் அவதார குறிப்பு. “ஸஹஸ்ர பாஹும் புருஷம் புராணம்சயாநம் அப்தௌ லலிதா […]