ஆத்திச் சூடி
ஆத்திச் சூடி : 01 ஆத்தி மரம் இந்து மரபில் முக்கியமான பங்குடையது. அந்த மலரின் பூவினை சிவபெருமான் விரும்பி அணிவார் என்பது ஐதீகம். அம்மரம் பல சிவத் தலங்களில் தலவிருட்சமாகவும் உண்டு. ஆத்திமரமே ஆர் மரம் எனப்பட்டது, இந்த ஆர் மரங்கள் நிறைந்திருந்த பகுதிகள்தான் ஆரப்பாக்கம், ஆரப்பாளையம், ஆரூர் (திருவாரூர்), ஆற்காடு என்றானது. இந்த ஆத்திப் பூவினை அணிந்த சிவனுக்கு சமர்ப்பணமாக ஒளவையார் பாடிய தமிழ்ப் பாடல்தான் “ஆத்திச் சூடி”. தமிழ் மொழியினை உருவாக்கியவர் சிவபெருமான்; […]