பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பழமொழி நானூறு : 18

“ஒருவர் உரைப்ப உரைத்தால் அது கொண்டுஇருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலாபெரு வரை நாட சிறிதேனும் இன்னாது,இருவர் உடன் ஆடல் நாய்” இருவர் ஒரு கருத்துக்காக வாதிடும் பொழுது இருவருமே ஒரே நேரத்தில் பேசி கூச்சலிட்டால் அதனால் ஆகபோவது ஒன்றுமில்லை, அது ஒரே நாயினை இருவரும் ஒரே நேரத்தில் வேட்டைக்கு பயன்படுத்துவது போன்றது என்கின்றார் புலவர் ஒரே நாயினை இருவர் ஒரே நேரத்தில் வேட்டைக்கு செலுத்த முடியாது, ஆளுக்கு ஒரு நாய் வைத்திருப்பதே சிறந்தது, அப்படி இருவர் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 10

“ஆதியொளியாகி யாள்வானுந் தானாகிஆதி யவனுருவு மாம்” இக்குறள் “ஆதிஒளியும் ஆகி ஆள்வானும் தான் ஆகி ஆதி அவனும் உருவுமாம்” என பொருள். இந்த ஒளிமிக்க ஜீவாத்மா எங்கிருந்து வந்ததோ அதுவே மூல ஒளியாகும், அந்த மூல ஒளியே பரமாத்மாவும் உலகை ஆள்பதாகவும், ஆதியும் பரம்பொருளாகவும் இருக்கும் ஈசன் என்பது பொருளாகும் இங்கு ஆதி என்பது சிவபெருமானை குறிக்கின்றது, இந்த ஆதி எனும் வார்த்தையினை ஒளவையின் சீடரான வள்ளுவனும் தன் குறளின் தொடக்கத்தில் சொல்லியிருக்கின்றான், அவ்வகையில் வள்ளுவன் சொன்ன […]

அந்த கோட்டை ஈஸ்வரன் ……

ஷேஷப்பா.. அந்த கோட்டை ஈஸ்வரன் தன் மக்களை காக்கும் போது, நீர் ஏன் உம் பிரிட்டன் ஜனங்களை காக்காமல் ஒரு இந்துவிடம் கையளித்தீர் தகப்பனே அய்ய்யா நாங்கள் இந்தியாவுக்கே கிறிஸ்தவ பிரதமர் ஆட்சி கோரி கதறும் நிலையில் நீர் பிரிட்டன் எனும் கிறிஸ்தவ தேசத்துக்கே ஒரு இந்துவை பிரதமராக்கியது எப்படி அய்யா? அய்ய்யா எங்கள் தகப்பனே, எங்களுக்கு படி அளந்து காரும் வீடும் தந்தவனே, பிரிட்டனை காட்டித்தானே இங்கு அப்பாவி மக்களை நாங்கள் ஏமாற்றி சம்பாதித்தோம் பிரிட்டனில் […]

கோவை கார் …

தீபாவளியன்றுமாக வந்த அதிர்ச்சி செய்தி அது, எவ்வளவு பெரிய சதியில் இருந்து கோவை தப்பியிருக்கின்றது எனும் தெய்வாதீனமான காவல் செய்தி அது அந்த சதியினை சர்வ வல்லமை பொருந்திய என்.ஐ.ஏ தடுக்கவில்லை, மாநில காவல்துறை உளவுதுறை தடுக்கவில்லை, இதனை தடுத்து காத்திருப்பது அந்த கோட்டை ஈஸ்வரர் எனும் காவல் தெய்வம் ஆம், அந்த சதிகாரனின் கார் கனத்த வெடிபொருளோடு அந்த கோவிலை கடக்கும்பொழுது வெடித்திருப்பது சாதாரணம் அல்ல, இந்துக்களை போல அவர்களின் தெய்வமும் விழித்துகொண்டது என்பதன் அறிகுறி […]

அந்த பிரிட்டனில் எல்லா நாட்டு மக்களும் எல்லா இனமும் உண்டு..

அந்த பிரிட்டனில் எல்லா நாட்டு மக்களும் எல்லா இனமும் உண்டு, எல்லா மதமும் மொழியும் உண்டு, வெள்ளையர்கள் சீனர்கள் கருப்பர்கள் அராபியர்கள் என எல்லா சமூகமும் உண்டு அந்நிலையில் வெள்ளை பிரதமருக்கு மாற்றாக ஒரு ஆசிய கருப்பர் (அதாவது அவர்கள் வழமையில் வெள்ளையர் அல்லாத எல்லோருமே கருப்பர்கள்தான், அது எவ்வளவு நிறமாக இருந்தாலும் கருப்பனேதான்) பிரதமராகியிருக்கின்றார் அதனை விட முக்கியம் ஒரு இந்து முதல் வெள்ளை கிறிஸ்தவர் அல்லாத‌ இந்து பிரதமராகியிருக்கின்றார் ரிஷி சுணக் எனும் இந்திய […]

பழமொழி நானூறு : 17

“கேட்பாரை நாடி கிளக்கப்படும் பொருட்கண்வேட்கை அறிந்து உரைப்பார், வித்தகர் -வேட்கையால்வண்டு வழிபடரும் வாள் கண்ணாய் தோற்பனகொண்டு புகாஅர் அவை” தன் சொல்லினை கவனமாக கேட்போர் இருக்கும் சபைக்குத்தான் அறிவுடையோர் தங்கள் கருத்துக்களை கொண்டு செல்வார்கள், வண்டு தொடரும் கண்களை உடைய பெண்ணே, தன் கருத்துகள் தோற்கும் என தெரிந்தால் அதனை சபைக்கு கொண்டு செல்லமாட்டார்கள் என்பது பாடலின் பொருள் இங்கு ஒரு அழகான உவமையினை சொல்கின்றார் புலவர் “வேட்கையால் வண்டு வழிபடரும் வாள் கண்ணாய்” என்கின்றார், அதாவது […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 180 – தூய ஒளிகாண்டல் / குறள் : 09

“பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில்பரம்பரமே யாய வொளி” விசும்பு என்றால் ஆகாயம் என பொருள் இக்குறள் “பரந்த விசும்பில் பரந்தவொளி காணில் பரம்பரமே ஆய ஒளி” என பிரிந்து பொருள்தரும் பரந்த ஆகாயத்தில் சூரிய வெளிச்சம் பரவி ஜொலிப்பது போல யோகத்தின் உச்சியில் பரபிரம்மத்தின் ஒளி தெரிந்தால் அந்நிலை முக்தி நிலையாகும் யோகத்தின் உச்சியில் துரிய சக்கரம் துலங்கும், அச்சக்கரம் துலங்கும்பொழுது பெரும் ஒளிபிழம்பினை வானில் சூரியன் தெரிவது போல் அககண்ளால் காணலாம், அந்நிலை முக்தி நிலையாகும் […]

அண்ணே நரகாசுரன் ஒரு தமிழன்

அண்ணே நரகாசுரன் ஒரு தமிழன் ஆஹான் ஒரு தமிழன வடநாட்டுக்காரன் கொன்னுருக்கான் அதையும் புதுட்ரேஸ் எல்லாம் போட்டு கொண்டாடுறீங்க, நான்சென்ஸ்.. உங்கள பாத்தா வெக்க வெக்கமா வருது டேமிட் , அழனும்ணே அழனும் ஆஹான், சரி அப்புறமா அழலாம், நரகாசுரன பத்தி சொல்லுஅவன் தமிழன், தமிழினம் டேய் அது அவன் பேசிய மொழி, அவனுக்கு மதம்? அது ..அது.. அவன் பிரம்மன்கிட்ட வரம் வாங்கிருந்தான் பிரம்மன் எந்த மத கடவுள்? என்னெண்ணே இது, அவரு இந்துமத கடவுளு, […]

பாரத தேசத்தை ஒரே தேசமாக இணைக்கும் தேசாபிமான பிறப்புக்கள் எப்பொழுதும் ஒவ்வொரு காலத்தில் பிறந்து கொண்டே இருக்கும், அது இத்தேசத்தை ஒரே தேசமாக நிலைக்க வைக்க தன் வாழ்வை அர்பணிக்கும் மாபெரும் சவால் எடுத்து இந்த பாரத கண்டத்தை ஒரே கண்டமாக நிறுத்தும், அந்த அதிசயம் விக்ரமாதித்தன் காலத்தில் இருந்து உண்டு, பட்டேல் வரை உண்டு நம் கண்முன்னும் அப்படி ஒரு சாட்சி உண்டு, அவர்தான் இரண்டாம் வல்லபாய் பட்டேல் எனும் பட்டேலின் இன்னொரு வடிவமான அமித்ஷா […]

சேவல் விருத்தம் : 11

“பூவிலியன் வாசவன் முராரிமுநி வோரமரர்பூசனைசெய் வோர்மகிழவேபூதரமும் எழுகடலும் ஆடஅமு தூறஅநுபோகபதி னாலுலகமும்தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாளவருதானதவ நூல்தழையவேதாள்வலிய தானபல பேய்கள் அஞ்சச் சிறகுகொட்டிக் குரற்பயிலுமாம் காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழைகமுகாடவிகள் பரவுநடனக்காரணமெய்ஞ் ஞானபரி சீரணவ ராசனக்கனகமயில் வாகனனடற்சேவகன் இராசத இலக்கண உமைக்கொருசிகாமணி சரோருகமுகச்சீதள குமாரகிரு பாகர மனோகரன்சேவற் றிருத் துவசமே” இந்த பாடலின் முதல் வரியினை எடுக்கலாம் “”பூவிலியன் வாசவன் முராரிமுநி வோரமரர்பூசனைசெய் வோர்மகிழவே” அதாவது பிரம்மன் (பூவிலியன் என்பது பூவில் அயன் என வரும், இவ்வார்த்தை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications