சிவனுக்கு தமிழ் தெரியாது : ஜக்கி வாசுதேவ்

Image may contain: 1 person, sittingImage may contain: 1 personகொஞ்சமும் வேலையே செய்யாமல், ஊரான் பணத்தில் உடம்பு வளர்ந்தால் என்னாகும் என்றால் இப்படித்தான்.

இதுதான் அண்ணன் பிரபாகரன் காட்டிய வழி, அவரை போலவே அங்கிளும் உடல் பருத்தாயிற்று

யார் சாவது பற்றியும் கவலைபடாமல் ஆமைகறியும் மூன்று வகை இறாலும், கணவாய் மீனும், உடும்பு கறியுமாக‌ மாறி மாறி தின்றால் இப்படித்தான்


சிவனுக்கு தமிழ் தெரியாது : ஜக்கி வாசுதேவ்

கடவுள் என்பவர் மதம், இனம், மொழிகளை கடந்தவர். அந்த பரம்பொருளில் இருந்தே எல்லாமும் உதித்தன‌

ஜக்கி இப்படி உளரும்பொழுதே இது ஒரு அரைகுறை ஆசாமி என்பது தெரிகின்றது, ஆன்மீகவாதி என சொல்ல மனிதருக்கு ஒரு தகுதியுமில்லை

புராண எடுத்துகாட்டுகளை பார்த்தால் கூட அகத்தியரை தெற்கே அனுப்பியது சிவன், முருகன் எனும் தமிழ்கடவுளின் தந்தை சிவன்

இதுபோக மதுரை திருவிளையாடல் புராணங்களில் அவர் நக்கீரனுடன் வாதிட்டது முதல் “கொங்குதேர் வாழ்க்கை” என தமிழ்பாடல் எழுதி, வைகையாற்றுக்கு பெயர் வைத்த சம்பவங்கள் வரை சொல்வதென்ன?

எத்தனை அடியார்கள் சிவனின் பெருமையினை பாடினார்கள், தமிழ் புரியாமலா அவன் அவர்களை ஆட்கொண்டான்?

இன்றும் சிவனை “தென்னாடுடைய சிவனே போற்றி” என்றுதான் வணங்குகின்றார்கள்.

ஜக்கி ஒரு பிராடு ஆசாமி என்பதால் இதெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை, இது கூட தெரியாமல் சிவனின் பிரமாண்ட சிலையினை அவர் வைத்திருக்க தகுதியுமில்லை