பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அவருக்கு ஏதோ பூர்வ ஜென்ம தொடர்ச்சி மிக சரியாக இருக்கின்றது அவர் பிறந்தபின் உத்திரபிரதேசத்தை அரசர் போல் ஆண்டுகொண்டிருந்த நேரு குடும்பம் செல்வாக்கினை இழக்க தொடங்கியது, இந்திரா மிகபெரும் சவால்களை சந்தித்தார் அவர் வளர வளர நேரு குடும்பம் பல சோதனைகளை சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு இழந்தது அவர் அரசியலில் 18 வயது இளைஞனாக கால்வைத்த 1990க்கு பின் காங்கிரஸின் கடைசி நம்பிக்கையான ராஜிவும் இல்லாது போனார், அதே வருடம் மசூதியும் இல்லை அப்பொழுது யோகி […]

காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம்.

இந்த காட்மேன் டிரைலர் நிறுத்தபட்டதில் பலருக்கு கடும் வருத்தம் சிலருக்கு கண்ணீர் அழுகை அதில் திருமாவும் பா.ரஞ்சித் என்பவரும் முக்கியமானவர்கள் அதாவது இவர்கள் தொழிலே மேல்சாதி என எதையாவது சொல்லி, இந்துமதத்தை சீண்டிகொண்டே இருப்பது என்பதால் அப்படித்தான் சொல்வார்கள். டிரைலர் நிறுத்தபட்டது ஆதிக்கசாதியின் வெறி என்கின்றது இந்த கோஷ்டி கவனியுங்கள் குடியரசு தலைவர் ஒரு தலித், தமிழக சபாநாயகர் ஒரு தலித், தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு தாழ்த்தபட்ட சாதி, ஸ்டாலினின் பலம்வாய்ந்த கூட்டாளி திருமா […]

உண்மைகள் உறங்குவதுமில்லை, பொன்.சிவகுமாரன் மறைவதுமில்லை.

அது 1974ம் ஆண்டு, ஈழ தமிழர்களை சிங்கள அரசுகள் ஒடுக்க ஆரம்பித்த நேரம். வஞ்சகமாக இந்திய மலையக வம்சாவழிதமிழரில் பெரும்பான்மையினரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது ஒரு ஈழதமிழரும் அதனை கண்டிக்கவில்லை,எதிர்க்கவில்லை என்பதுவேறுகதை ) ஈழதமிழரை குறிவைத்து காய்களை நகர்த்தியது. இறுதியாக ஒரு திட்டத்தினை கொண்டுவந்தது. கொண்டுவந்தவர் சிறிமாவோ பண்டாரநாயக, தந்திரகாரி அவர். யானைகுட்டியை கொடுத்து கச்சதீவை வாங்கியர் (அதாவது கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டபொழுது இந்திராவுக்கு இவர் ஒரு யானைகுட்டி பரிசளித்தார்) என சிங்களர்களால் கொண்டாடபட்ட சிறீமாவோ. அதாவது […]

மத்திய அரசை வாழ்த்துகின்றோம்.

கொரோனா காலத்தில் தன் மகளின் படிப்பு செலவுக்கு வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை மக்களுக்கு செலவிட்ட மதுரை மோகன் என்பவரை முன்பே மோடி பாராட்டியிருந்தது குறிப்பிடதக்கது. இப்பொழுது அவரை இன்னும் கவுரவத்திருக்கின்றது அரசு அதாவது மோகனை அழைத்து கட்சியில் சேர்க்கவில்லை, ஒன்றிய தலைவர் பதவி கொடுக்கபடவில்லை அது அரசியல் அதை விட பெரும் கவுரவத்தை செய்திருக்கின்றது மத்திய அரசு. ஆம் எந்த மகளுக்காக சேர்த்துவைத்த பணத்தை மோகன் மக்களுக்கு செலவிட்டாரோ, அதனால் எந்த மகளுக்காக கலங்கி நின்றாரோ […]

இந்திய சீன முறுகலில் ஒரு நாடு கனத்த அமைதி , அது யாரென்றால் ரஷ்யா.

என்னதான் கொரோனா என்றாலும் அமெரிக்கா வரதுடித்து என்னவெல்லாம் சொல்லும் களத்துக்கு ரஷ்யா வராமல் இருப்பது ஆச்சரியமாக பார்க்கபட்டது இப்பொழுது இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் எதையோ சம்பிரதாயத்துக்கு சொல்லியிருக்கின்றாரே தவிர விஷயம் வேறு எங்கோ செல்கின்றது இந்தியாவும் சீனாவும் வைத்திருப்பது ரஷ்ய சாதனங்களே, இனி யுத்தம் என வந்தால் ரஷ்ய ஆயுதங்களே இருபக்கமும் பாயும் பாகிஸ்தானும் பெரும்பாலும் இப்பொழுது சீனாவுடன் சாய்வதால் இனி இந்திய எல்லையில் எந்த யுத்தம் வந்தாலும் ரஷ்ய ஆயுதமே வெடிக்கும் சீன தயாரிப்பு சில […]

சீனா , நேபாள அடிமைக்கு ஒரு வில்லங்கமான திட்டத்தை கொடுத்தது.

நேபாள அமைச்சர் ஒருவரும், பிரதமர் ஓலியும் ஒரு வரைபடத்தை வைத்து கொண்டு இந்தியா எங்கள் பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருக்கின்றது என கூப்பாடு போட்டதற்கு இந்தியா பதிலேதும் சொல்லவில்லை காரணம் இரு நாடுகளும் ஒப்புகொண்ட வரைபடம் உண்டு, அதில் சர்ச்சைகுரிய பகுதிகள் இந்திய பகுதி என்பது என்றோ தீர்வாயிற்று நேபாளத்தில் சில குழப்பவாதிகள் தூக்கிதிரியும் படம் நேபாள அரசால் அங்கீகரிக்கபட்ட படமல்ல என்பதால், அது மெட் இன் சைனா என்பதால் இந்தியா அதன் போக்கில் இருந்தது. (நாம் தமிழர் […]

சீன நிறைய சிக்கலிலே சிக்கியிருக்கின்றது!

சீனாவினை கட்டம் கட்டி தீருவது என முடிவு செய்துவிட்ட அமெரிக்கா , சில ராஜதந்திர நகர்வுகளை முன்வைக்க ஆடிபோய் கிடக்கின்றது சீனா ஆம் ஹாங்காங்க் சீனாவின் ஒரு பகுதி என சீனா சட்டம் கொண்டுவருவது பெரும் சர்ச்சையாகி பிரிட்டனும் அமெரிக்காவும் களத்துக்கு வந்து குதிக்கின்றது அப்படி சட்டம் வந்தால் ஹாங்காங் வாசிகளுக்கு பிரிட்டன் குடியுரிமை அளிப்போம் என்கின்றது பிரிட்டன், அப்படியானால் அந்த பிரிட்டன் குடிமக்களின் சொத்து என ஹாங்காங்கில் பிரிட்டன் தலையிட முடியும் இன்னொரு பக்கம் அமெரிக்க […]

தமிழக மக்கள் விழித்து கொள்ள வேண்டும்.

தமிழக நிலவரம் கொரோனாவில் மகா மோசமாக சென்று கொண்டிருப்பது சாதரண விஷயமாக படவில்லை. உயிர்பலிகள் அதிர வைக்கின்றன‌ சென்னை இதுவரை மகா சிக்கல்களை, மிரட்டல்களை சந்தித்த நகரம் அல்ல. முதல் உலகபோரில் ஜெர்மன் நீர்மூழ்கி குண்டு வீசியதை தவிர எந்த மிரட்டலும் வந்ததில்லை மழை வெள்ளம் மட்டும் மிரட்டும், வேறு எந்த பெரும் மிரட்டலும் பாதிப்பும் இதுவரை வந்ததில்லை ஆனால் கொரோனா சென்னை வரலாற்றிலே மிகபெரும் சவாலாக உருவெடுத்து நிற்கின்றது, திரும்பும் இடமெல்லம் கொரோனா என அது […]

பகவத் கீதை 18: மோட்ச சந்நியாச யோகம் : 03/03

“அர்ஜூனா, அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு. என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய். நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், உன் துணிவு பொய்யாகும் . இயற்கைகுணமான உன் போர் குணம் உன்னை அங்கே இழுக்கும் இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் […]

பகவத் கீதை 18ம் அத்தியாயம் ‍ – மோட்ச சந்நியாச யோகம் : 02/03

பகவத் கீதை 18ம் அத்தியாயம் ‍ – மோட்ச சந்நியாச யோகம் : 02/03 அர்ஜூனா, ஆசை நீங்கியவன், அஹங்காரமற்றவன், உறுதியும் ஊக்கமும் உடையவன் வெற்றி தோல்வியில் வேறுபடாதவன் இத்தகையவன் குணம் உடையோன் சாத்விகமானவன். ஆசையுள்ளவன், வினைப்பயனை விரும்புபவன், பிறர்பொருளை விரும்புபவன், துன்புறுத்தும் தன்மையுடையவன், சுத்தமில்லாதவன், மகிழ்வும் சோர்வும் கொள்பவன், அத்தகைய குணம் உடையோன் ராஜஸன். யோகத்திற்கு ஒவ்வாத மனமுடையவன், அறிவு வளரப்பெறாதவன், முரடன்,வஞ்சகன், பழிகாரன், சோம்பேரி, துயருறுபவன், காலம் நீட்டிப்பவன், இத்தகைய குணமுடையோன் தாம்சன். அர்ஜூனா, […]