அகிலா என்பவரின் சிக்கல் பெரும் சிக்கலாகின்றது…
இந்த அகிலா என்பவரின் சிக்கல் பெரும் சிக்கலாகின்றது, சிலர் உச்சநீதிமன்ற தீர்ப்பினை விமர்சித்துகொண்டிருக்கின்றார்கள்
அவருக்கு பிடித்தமான மதத்திற்கு அவர் மாறியிருக்கின்றார், அப்பொழுதுதான் வழக்குகள் பாய்ந்திருக்கின்றன, வழக்கு நடந்துகொண்டிருக்கும்பொழுது இதோ என் கணவர் என்று ஒருவருடன் நீதிமன்றம் ஏறியிருக்கின்றார்
நீதிமன்றம் எந்த அடிப்படையில் வழக்கு தொடுக்கபட்டதோ அந்த அடிப்படையில் அவர் படிப்பினை தொடரலாம் என தீர்பளித்திருகின்றது, திருமணம் எல்லாம் அதற்கு பின்பு நடந்திருக்கின்றது
ஆனால் ஹதியாவோ நான் சுதந்திரமாக இல்லை, என சொல்லிகொண்டிருக்கின்றார்
பெரும் குழப்பமாகவும், ஒரு வித சிக்கலாகவும் நிலமை சென்று கொண்டிருக்கின்றது
இப்பொழுது அம்மணிக்கு என்ன சுதந்திரம் கெட்டுவிட்டது என தெரியவில்லை, படித்துகொண்டிருக்கும் பெண்ணுக்கு தொடர்ந்து படிக்க வாய்பளிக்கபட்டிருக்கின்றது படித்து முடித்து வந்து அடுத்த
விஷயத்தை பார்க்கலாம்
இந்த வழக்கு கொஞ்சம் சர்ச்சையானது, அதாவது அந்த பெண் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்புதான் திருமணம் செய்திருக்கின்றார், ஆக இது மதத்திற்கு பின்பான காதல் என்ற வகையில் வருகின்றது
அப்பெண்ணிற்கு மதம் முக்கியமென்றால் மதத்தில் இருக்கலாம், காதல் முக்கியமென்றால் மதத்தை தூர எறிந்துவிட்டு இருவருமே புத்த மதத்திற்கொ இல்லை வேறு மதத்திற்கோ மாறி தொலையலாம்
இந்த சமூகத்தில் அதுதான் யதார்த்தம், இல்லாவிட்டால் அவர் கொஞ்சநாளைக்கு பரபரப்பு செய்தியாக இருப்பாரே அன்றி ஒரு நாளும் நிம்மதியாக இருக்க போவதில்லை
ஆனால் இந்திய குடிமகளாக அவரின் அடிப்படை உரிமைகளை காக்க நீதிமன்றம் செயல்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை
இது மதசார்பற்ற நாடு என்பதால் யாரும் எந்த மதத்தையும் பின்பற்ற முழு உரிமை உண்டு. இந்நாட்டின் பலம் அது இன்னொரு வகையில் குழப்பமும் பலவீனமும் அதுவே
இங்கே இப்படி ஒரு சிக்கல் என்றால் வடக்கே ஒரு இந்துபெண்ணும் இஸ்லாம் பையனும் காதலிக்கின்றார்களாம், நீ இந்துவாக வா உன்னை ஏற்றுகொள்கின்றேன் என காதல் தியாகபோர் (அதாவது லவ்ஜிகாத்தின் எதிர்பதம்) நடத்துகின்றார் இந்த அம்மணி
அட இது புதுசா இருக்கே என மொத்த புது இந்தியாவும் ஆச்சரியத்தில் பார்த்துகொண்டிருக்கின்றது, எச்.ராசா வகையறா எல்லாம் “இந்துக்களுக்கு அறிவும் மானமும் வந்திருச்சி டோய்” என குதித்துகொண்டிருக்கின்றன
இன்னும் என்னென்ன விசித்திர மத விளையாட்டுகள் எல்லாம் இங்கு நடக்குமோ தெரியவில்லை
முதலில் இந்த காதல் என்பதே மகா அற்பமானது, அதில் மதத்தை கலந்து விளையாடுவது மகா அற்பமானது.
ஆனால் இதில் பாதிக்கபடுவது யாரென்றால் சாட்சாத் பெண்கள் தான், அறியா வயதில் அகிலா போல ஓடிவிடுகின்றார்கள்
அதன் பின் அங்கு தாய், இங்கு இவர்கள் என துடிக்கின்றார்கள். ஒரு கட்டத்தில் கசப்பு மறைந்து பாசம் ஓங்கினாலும் அங்கே இருந்து வர தாயினை அவர்கள் மதம் தடுக்கின்றது
இங்கே இருந்து செல்ல கணவனின் கண்டிப்பு தடுக்கின்றது
அங்கே தாயும், இங்கே மகளும் அழுது தொலைக்கின்றார்கள், சில இடங்களில் கண்கூடாக பார்த்திருக்கின்றோம்
இந்த காதலில் விழுந்து எதற்கோ துணிந்து மத சிக்கலில் மாட்டி கடைசி வரை கண்ணீரில் அழப்போவது பெண்கள்தான், மதங்கள் பெண்களுக்கு கொடுக்கும் பெரும் தண்டனை அது.