அக்காலத்தில் மிகுந்த மருத்துவமும் பாதுகாப்பும் இருந்திருக்கின்றது!

பெரியம்மை , சின்னம்மை இதெல்லாம் வெளிநாட்டு மருத்துவமே ஒழித்தது, சித்த மருத்துவம் ஒழிக்கவில்லை என சொல்லும் பகுத்தறிவு கோஷ்டி சத்தம் அதிகம் வருகின்றது

இவர்கள் ஒருமாதிரியான ஆசாமிகள் இங்கு மேல்நாட்டு மருத்துவம் வந்தே இருநூறு ஆண்டுதான் ஆகின்றது, அதற்கு முன் நிலை என்ன? பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு மக்களை காத்த வழி எது?

இந்திய சித்தர்கள் ஞானிகளின் மருத்துவம் சில ஆயிரம் ஆண்டுக்கு முன்பே ஏற்பட்டது, இயமலை சிஸ்ருதர் முதல் பொதிகை மலை அகத்தியர் வரை மருத்துவம் வளர்த்தனர்

அந்த மருத்துவத்தில்தான் ஆரோக்கிய சமூகம் இருந்தது, அந்த சமூகமே பொன்விளையும் தேசமாக இந்நாட்டை மாற்றி வைத்தது

நோயும் நோஞ்சானும் பலமும் இல்லா நோயாளி சமூகம் எப்படி இங்கு பெரும் வசதியாய் வாழும்? தஞ்சை போன்ற கோவில்கள் எழும்?

ஆம் இங்கு சித்த மருத்துவம் அந்த பாதுகாப்பை கொடுத்தது, அந்த பலத்தில் ஆரோக்கியமான சமூகம் பொன்விளையும் பூமியாய் இதை மாற்றியது

அந்த செல்வமே கிரேக்கர் முதல் ஆப்கானியர் வரை இங்கு படையெடுக்க வைத்தது

சரி உங்களிடம் ஒரு சக்திவாய்ந்த ராணுவம் இருந்து உலகை கைபற்ற சொன்னால் அரேபிய எண்ணெய் கிணறு , சிங்கப்பூர், நியூயார்க் என செல்வம் கொழிக்கும் இடத்திற்கு செல்வீர்களா, இல்லை ஆப்ரிக்க்காவின் சோமாலியாவுக்கு செல்வீர்களா?

செல்வம் இருக்குமிடமெ கொள்ளையன் வருவான்

அப்படி வந்தான் ஆப்கானி, அவனே இங்குள்ள பாரம்பரியங்களை ஒழித்தான், நோயுற்ற ஆரோக்கியமில்லா சமூகம் தனக்கு அடிமையாய் இருக்கும் என்பதே அவன் கணக்கு

இப்படி எல்லாமும் ஒழிக்கபட்ட மகா குழப்பத்தில்தான் வெள்ளையன் வந்தான், அவனுக்கும் வியாபார அவசியம் இருந்தது, ஒரு மாத்திரையில் எவ்வளவு சம்பாதிக்கமுடியும் என கணக்கிட்டான்

லண்டன் துணி முதல் மருந்துவரை இங்கு விற்கபடும் சந்தையாய் மாற்றினான்

அப்படித்தான் மேற்கு மருத்துவம் இங்கு வந்தது இதெல்லாம் கொஞ்ச காலத்துக்கு முன்பே அதுவும் குழப்பம் ஏற்பட்ட காலத்திலே

அதற்கு முன் இத்தேசம் மிக பலமாய் வாழ சின்னம்மை பெரியம்மையில் இருந்து பாதுகாப்பாக வாழ இங்குள்ள மருத்துவமே உதவி செய்தது

சிஸ்ருதரும் இன்னும் பலரும் போகரும் வாழ்ந்த காலத்தில் ஐரோப்பா காய்ச்சலுக்கு மண்டையில் ஆணியால் அடிக்கும் காட்டுமிராண்டிதனத்தில் இருந்தது

அலெக்ஸாண்டருக்க்கு பின் இங்கிருந்த அரேபியாவில் இருந்த மருத்துவ செல்வங்கள் ஐரோப்பாவுக்கு கடத்தபட்டன, அதன் விளைவுதான் இன்று காணும் மருத்துவம்

ஏதோ இங்கே ஆண்டாண்டு காலமாய் பெரியம்மை சின்னமையில் எல்லோரும் செத்தது போலவும் வெள்ளையன் வந்து ஒழித்தது போலவும் பில்டப்புகள்

அப்படி நோயுற்ற சமூகமா கல்லணை கட்டிற்று? தஞ்சை கோவிலை எழுப்பிற்று?

சோமநாதபுரி, பூரி ஆலயங்களை எழுப்பிற்று, காசியினை நிர்ணயித்தது?

பொன்னும் வைரமும் கொட்டிகிடக்கும் பூமியாய் எல்லா நாட்டு வியாபாரிகளையும் இழுத்தது

ஆழ யோசியுங்கள், பல உண்மைகள் விளங்கும், இங்கு அக்காலத்தில் மிகுந்த மருத்துவமும் பாதுகாப்பும் இருந்திருக்கின்றது , மக்கள் ஆரோகியமும் அது கொடுத்த செல்வமும் அப்படி இருந்திருக்கின்றது

இல்லாவிட்டால் எல்லா நாட்டு மக்களும் வந்து கெஞ்சும் அளவு இந்நாடு செல்வமாய் இருந்திருக்காது..