அக்னிபாத்

ஒவ்வொரு நாட்டுக்கும் ராணுவம் முக்கியம், பொதுவாக ராணுவத்தாருக்கும் ராணுவத்தில் இணையவேண்டும் என்பவருக்கும் நாட்டுபற்றும், கட்டுகோப்பும் இயல்பாக இருக்கும்

இந்தியாவில் எங்களுக்கு அக்னிபாத் திட்டத்தால் ராணுவத்தில் இடமிருக்காது என ஒரு கோஷ்டி வன்முறையிலும் அழிச்சாட்டியத்திலும் ஈடுபட்டு இந்திய நாட்டின் சொத்துக்களையே அழிக்கின்றது, இது விசித்திரமானது மட்டுமல்ல முகமூடிகளை கிழிப்பதுமாகும்

உண்மையில் ஒரு ராணுவவீரன் தன் நாட்டின் சொத்துக்களை காக்க எதிரிநாட்டு சொத்துக்களையும் வளங்களையும்தான் அழிப்பான், இவர்களுக்கு உண்மையிலே நாட்டுபற்றும் ராணுவம் மேல் அபிமானமும் இருந்தால் இந்த காரியங்களை செய்யமாட்டார்கள், ஒருவேளை ராணுவ பணி இல்லாவிட்டாலும் நாட்டை காக்க ஆயிரம் வழி உண்டு அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள்

ஆக இவர்கள் நோக்கம் உண்மையான தேசபக்தியும் ராணுவ சேவையுமாக இருக்கமுடியாது, இவர்களை அடையாளம் கண்டு எக்காலத்திலும் ராணுவத்திற்கு இடமளிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும்

இந்தியாவில் எப்பொழுதும் ஒரு விசித்திரம் உண்டு, உலகளவில் அது பெரும் காமெடியாகவும் சொல்லபடும்

அதாவது ஒரு விஷயத்தில் அல்லது திட்டத்தில் அடிப்படை அறிவே இல்லாதவர்களெல்லாம் அது பற்றி பக்கம் பக்கமாக பேசுவார்கள், ஊடகங்களும் அதை தாங்கி பிடிக்கும்

பொருளாதாரம் தெரியாதவன் பொருளாதார போராளியாக கர்சிப்பான், சிவகாசி பட்டாசு வெடிப்பதை கூட சொல்ல தெரியாதவனெல்லாம் அணுசக்தி பற்றி பேசுவான், இன்னும் என்னவெல்லாமோ நடக்கும்

அப்படி ராணுவம் ஒரு திட்டத்தை அறிவிக்க, அத்திட்டம் என்னால் என்னவென்றே தெரியாதவனெல்லாம் குதிக்க தொடங்கிவிட்டான் காங்கிரசார் உள்பட‌

அக்னிபாத் என ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் திட்டத்தை அரசு அறிவித்தால் அதன் சாதக பாதகங்களை விளக்கும் உரிமையும் தகுதியும் ராணுவத்தாருக்கும் ராணுவ தளபதிகளுக்குமே உண்டு

இந்திய ஊடகங்களும்,காங்கிரஸ் போன்ற அழிச்சாட்டிய கட்சிகளும் இவ்விவகாரத்தில் இந்திய ராணுவ தளபதிகளின் கருத்துக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டுமே தவிர, இவர்கள் ஏதோ இந்திய ராணுவத்தார் போல கதறிகொண்டிருக்க கூடாது

உண்மையில் இந்திய ராணுவத்திற்கான திட்டங்களுக்கு முட்டுகட்டை போட துடிக்கும் இவர்கள் மேல் தேசவிரோத வழக்கு பதியபட வேண்டும்

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அற்ப காரணங்களுக்காக‌ யார் யார் மேலோ வழக்கு பதிவு செய்யபடும் நிலையில் இப்படி இந்திய ராணுவவலிமைக்கு குறுக்கே நிற்பவர்கள் மேல் வழக்கு தொடரவேண்டும் அதுதான் சரி

தேசதுரோக வழக்குகளை பாய்ச்சலாம்

இந்திய ராணுவம் நாட்டை காத்து நிற்கும் மாபெரும் அரண் என்பதால் அவர்களுக்கான விஷயங்களில் அரசியல்வாதிகளும் குழப்பவாதிகளும் தேசவிரோதிகளும் குறுக்கிடாமல் இருக்க வழி செய்யபடவேண்டும் இது அவசியமான ஒன்று

அதிதீவிர ஜனநாயகம் கொண்ட நாடு இந்தியா, அங்கு தேசிய நெடுஞ்சாலையிலும் ஊருக்குள்ளும் மாடுகளுக்கும் நாய்களுக்கும் கூட உரிமையும் ஜீவநாயகம் என பல உண்டு, அப்படிபட்ட இந்தியாவில் இப்படியெல்லாம் பல கட்டுபாடுகள் அவசியம்

இவ்விவகாரத்தில் அதாவது அக்னிபாத் திட்டத்தின் பலன்கள் பற்றி ராணுவ அதிகாரிகள் பேசதொடங்கியிருப்பது நல்ல விஷயம், இந்திய ஊடகங்கள் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் அதை இருட்டடிப்பு செய்யும் விஷயங்களை தேசவிரோத ஊடகங்கள் செய்யுமானால் அவற்றின் உரிமத்தை ரத்து செய்யவேண்டியது அரசின் கடமை

நாட்டுக்கு அவசியமான செய்திகளை சொல்லாமல் குழப்பம் மட்டும் விளைவிக்கும் ஊடகங்கள் இங்கு அவசியமற்றவை ஆபத்தானவை அவற்றை உடனே கட்டுபடுத்த வேண்டும்