அங்கிளே தும்பிகளிடம் அடிபடும் காலம் வரலாம்
திருச்சியில் நாம் தமிழரை போட்டு சாத்தியிருக்கின்றார்கள், சும்மா சொல்ல கூடாது நல்ல அடியாம்
என்ன கொடுமை இது? பச்சைதமிழன் பழனிச்சாமி ஆட்சியில் தமிழ்நாட்டிலே தமிழன் தாக்கபட்டிருகின்றான்
அதைவிட கொடுமை தாக்கிய தமிழன் கைது செய்யபட்டு அவர்கள் மீது வழக்கும் பதிந்தாயிற்றாம்
ஆக தமிழன் கைகால் முறிந்து கட்டிலில் கிடக்க வேண்டும், தமிழன் உருப்படாமல் போக வேண்டும், அடித்த தமிழன் சிறையில் கிடக்க வேண்டும் என்பது இந்துத்வா பிராமண அரசின் படுபயங்கர திட்டம் என்கின்றது திராவிட கும்பல்
அன்னார் சைமன் இதனை எல்லாம் சும்மா விடுவாரா? உலகில் எந்த மூலையில் தமிழனை அடித்தாலும் சும்மா விடமாட்டேன் என முறுக்கியவர் அவர்
தமிழகத்தில் நடந்தால் விடுவாரா? ஆனாலும் அமைதி
“அண்ணே உங்கள நம்பித்தான பேசினோம், நீ பேசினததான பேசினோம், அத நம்பித்தானே களமாடினோம், இப்படி அடிக்காங்க ஏண்ணே, ஏதாவது பண்ணுண்ணே ” என தும்பிகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் இருக்கின்றார் அங்கிள்.
அங்கிள் அடித்த தமிழருக்கு ஆதரவாக வருவாரா? அடிவாங்கிய தமிழர் பக்கம் வருவாரா?
இல்லை தமிழனை தமிழன் அடித்தால் சரி என சொல்லிவிட்டு செல்வாரா என தெரியவில்லை
எவ்வளவு நாள்தான் நாம் தமிழர் கட்சியினரே வாங்குவார்கள், தலைவரும் வாங்கினால் என்ன?
விரைவில் அங்கிளே தும்பிகளிடம் அடிபடும் காலம் வரலாம்