அங்கிள் சைமனையோ அவரின் வீரம் மிகுந்த சீற்ற உரையினையோ யாரும் கண்டீர்களா?
ஆர்.கே நகரில் அங்கிள் சைமனையோ அவரின் வீரம் மிகுந்த சீற்ற உரையினையோ யாரும் கண்டீர்களா?
கலைஞரை முன்பு எப்படி எல்லாமோ இழுத்து பேசியவர் இங்கு பழனிசாமியினையோ , தினகரனையோ எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசவில்லை
ஏன் அவ்வளவு சத்தமில்லை?
சமீபத்தில் ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது, அதில் அங்கிள் தன் உலக பெருமைகளை பேசிகொண்டிருக்கின்றார்
அதாவது ஈழதமிழர்கள் உள்ள இடங்களில் அங்கிளின் அபிமானிகள் முன்பு நிறைய இருந்தார்கள், பின் இவரை விட வைகோ பரவாயில்லை என ஒதுங்கினார்கள், இப்பொழுது ஒன்றிரண்டு பேர் இருக்கலாம்
அதில் ஒருவர் ஜெர்மனியில் இருக்கின்றாராம், அவர் இவரிடம் இப்படி சொன்னாராம்
“அண்ணே இங்க ஒரு ஜெர்மனிக்காரன் உங்கள் ரசிகனாகிவிட்டான். இப்படி ஒரு உணர்ச்சிமிக்க பேச்சை கேட்டபின்னும் தமிழனுக்கு ஏன் உணர்ச்சி வரவில்லை? அவன் அவ்வளவு மானம் கெட்டவனா? என கேட்டுவிட்டான் அண்ணே” என்றாராம்
அங்கிள் சைமன் சாதரண ஆளா? பொட்டு அம்மனுக்கே பொட்டு வைத்த சாகசகாரர் அல்லவா உடனே கேட்டாராம் “அவனுக்கு எப்படிடா தமிழ் தெரியும்?”
அவன் சொன்னானாம்
“அண்ணே அந்த ஜெர்மனிக்காரன் நம்ம சாப்பாட்டு கடையில்தான் வேலை செய்கின்றான், உங்கள் வீடியோ பார்த்தே தமிழ்படித்தான்,
நாம் தமிழர் கட்சியில் தமிழருக்குத்தான் இடம், தமிழ்படித்தாலும் டிர்ம்ப் வந்தால் கூட சேர்க்க முடியாது என்பதால் அவனை செர்க்கவில்லை” என்றானாம்
ஆக ஜெர்மானியனுக்கு எல்லாம் தமிழ் உணர்வு ஊட்டிய அங்கிள் சைமனுக்கு இந்த ஆர்.கே நகர் மக்களுக்கு ஊட்ட முடியவில்லையா? எப்படிபட்ட சோகம் இது
ஜெர்மானியன் ஈழதமிழன் கடையில் சைமனின் பேச்சை கேட்டே தமிழன் ஆகிவிட்டானாம், எப்படி எல்லாம் கதை அளக்கின்றார் சைமன்?
உண்மையின் ஜெர்மானியன் சைமனின் பேச்சை கேட்டால் என்ன சொல்லியிருப்பான்?
“இப்படித்தான் எங்கள் ஊரில் ஹிட்லர் பேசினான், நாங்கள் எல்லாம் நம்பி 3 கோடி ஜெர்மானியரை பலிகொடுத்து நாசமாய் போனோம்
அந்த சனியனை தலைமுழுகிவிட்டு நிம்மதியாய் இருக்கின்றோம், தமிழரும் நிம்மதியாய் இருக்க வேண்டும் என்றால் இந்த இம்சையினை இப்பொழுதே கொன்றுவிடுங்கள், அது எல்லோருக்கும் நல்லது”