அங்கிள் சைமன் கோஷ்டி நோட்டாவை தாண்டி…

அங்கிள் சைமன் கோஷ்டி நோட்டாவை தாண்டி, பாஜகவினையும் தாண்டி கொஞ்சம் வோட்டுக்களை பெற்றுள்ளது

தினகரனின் வெற்றியினை விட இது மகா ஆபத்தானது

கிட்டதட்ட 3000 பேர் சைமன் கட்சிக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்கின்றது தேர்தல் முடிவு

இந்த 3000 பேருக்கும் டெங்கு, மலேரியா, ரேபிஸ் எனபடும் வெறிநாய்கடி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை போல உடனே தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஓக்கிபுயலில் கடலில் தத்தளித்த மீணவர்கள் போல் தத்தளித்து திசைமாறும் இவர்களை உடனே மீட்டல் வேண்டும்.

எனினும் இப்போதைக்கு ஒரே ஆறுதல் இந்த பாஜக கும்பல் இனி தங்களை மறுபரீசிலனை செய்யும் கட்டத்திற்கு வந்துவிட்டார்கள் என்பதுதான்

நாம் தமிழர் கட்சியே இவர்களை விட அதிக வோட்டு வாங்கியிருகின்றது, நோட்டா வாங்கியிருக்கின்றது என்றால் அவர்களை பற்றி சொல்ல என்ன இருக்கின்றது?


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது தி.மு.க. அல்ல, தேர்தல் ஆணையம்தான்: மு.க.ஸ்டாலின்

அப்படியே அந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு நீதிபதி ஷைனியின் தோல்வி, நீதிமன்றத்தின் தோல்வி என சொல்லிவிடுவோமா?