அங்கிள் சைமன் சீறுகின்றார்……
பழைய வீடியோக்கள் சுற்றுகின்றன அதில் அங்கிள் சைமன் சீறுகின்றார், “சிறை என்னை என்ன செய்யும்?, நான் படிச்சதே கம்பி எண்ணத்தான், சிறை சுகமானது” என கடும் முழக்கம்
இப்பொழுது அழைத்தால் செல்லமாட்டேன் என்கின்றார்
எதற்கு வழக்கு? காவல்துறையினரை இவர் தாக்கிய வழக்கு
ஈழத்தில் இலங்கை அரசு காவலர்களை கொன்று வளர்ந்தவர் பிரபாகரன், வீரப்பன் கிட்டதட்ட 100 காவலர்களை கொன்றவன்
இவர்கள் இருவரையும் குலசாமி இனசாமி என ஒருவன் சொன்னால் அவன் எப்படி இருப்பான்? இப்படித்தான் இருப்பான்
ஆனால் கலைஞர் ஆட்சியில் சிறை சென்ற சைமன் இப்பொழுது ஏன் செல்லவில்லை? சிறையில் ஏதோ நடக்கலாம் எனும் பயம் தவிர ஏதுமில்லை
அங்கிள் திமுக ஆட்சியில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என சிறை செல்வார், பாஜக ஆட்சியில் அஞ்சி செல்லமாட்டார்.
திமுக மீது அவருக்கு அவ்வளவு நம்பிக்கை
முன்பு கலைஞரை ஈனசாதி என மறைமுகமாக திட்டி, அதாவது கிரிக்கெட் பார்க்கும் ஈன்சாதி என சொல்லி சிறை சென்றுவிட்டு ஈழத்திற்காக சிறை சென்றதாக சொன்னார் அப்போது தயக்கமில்லை
இப்பொழுது காவலர் மீதே கைவைத்திருப்பதால் பயம்
இப்பொழுது சிறை செல்ல மறுப்பதால் அங்கிள் இமேஜ் சரிகின்றது, அடுத்தமுறை காங்கிரஸ் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் அப்பொழுது இழந்த இமேஜை சிறை சென்று தூக்கி நிறுத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றார் அங்கிள்
ஆக திமுக இனி ஆட்சிக்கு வர முதல் ஆளாக உழைக்க பொகின்றவர் அங்கிள் சைமனே