அங்கிள் சைமன் தன்னிலை விளக்கம்
அங்கிள் சைமன் தன்னிலை விளக்கம் ஒன்று கொடுத்திருக்கின்றார் , பயத்தில் உளறல் என்றால் எப்படி இருக்கும் என்பது அதில் நன்றாக தெரிகின்றது.
அவர் கட்சி வன்முறை இல்லா கட்சியாம், அவரும் வன்முறை விரும்பாதவராம்
தடை என்றால் அதை உடை என ரைமிங்காக முழங்கியது யார்?
ஒருத்தனையும் சும்ம விடமாட்டேன், தொலைச்சுபுடுவேன் என பல மேடைகளில் முழங்கியது யார்?
கட்சி தொடங்கும்பொழுதே அடி உதைக்கு தயாரானவன் மட்டும் வா என சவுடால் பேசியது யார்?
வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்த சிங்கள கிழவிகள் மீது கல்லெறிந்து வீரம்காட்டியது யார்?
அன்னாரின் வெறித்தனமான பேச்சில் அவரின் வீரம் உண்மை என நம்பிய தும்பிகள் காவலர் மீது பாய்ந்ததுதான் நிஜம்
இப்பொழுது அது.. இது..ஹ்ஹிஹிஹ் என மழுப்புகின்றார் அங்கிள்
ஒரு காவலர் மேல் பாய்ததற்கே இந்த பயமா?
இவர்தான் முன்பு 10 ஆயிரம் சிங்கள துப்பாக்கிக்கு அஞ்சாத நான், தமிழக சிறைக்கா அஞ்சுவேன் என முன்பு வசனமெல்லாம் பேசியவர்
ஆனாலும் முன்பு கைது செய்யபட்டபொழுது காங்கிரஸ் தூண்டலில் கருணாநிதி என்னை கைது செய்கின்றார் என முட்டு சந்துவரை புலம்பினார் சைமன்
இப்பொழுது மோடிபெயரும் இல்லை, பழனிச்சாமி அரசு என்ற பெயரும் இல்லை, அவ்வளவு வலுகவனம்
இம்மாதிரி இடத்தில் அடிக்கவில்லை என்றால் கூட “ஆம் நாங்கள்தான் அடித்தோம், இது தமிழின கோபம்..” என சொல்ல்விட்டு வரவேண்டும், நல்ல புத்தியுள்ள அரசியல்வாதி அப்படித்தான் சொல்லி கட்சி வளர்ப்பான்
ஆனால் அங்கிளுக்கு அறிவேது?
மொத்தத்தில் விழுந்துவிடாத வீரம் குப்புற விழுந்துகிடக்கின்றது, மண்டியிடாத மானம் தலைகீழாக நின்று புலம்பி கொண்டிருக்கின்றது.
பிடித்திருப்பதோ புலிக்கொடி, ஆனால் இப்பொழுது வரும் குரலோ கழுதையின் அழுகை