அங்கும் இங்கும் எங்கும்…
ஜெயலலிதா அடக்கத்தின் இறுதிகட்டத்தில் ஒரு விஷயம் நன்றாக தெரிந்தது
அதாவது ராகுல்காந்தி இறுதிவரை இருந்தார், கூட திருநாவுக்கரசர் மட்டும் இருந்தார் வேறு ஒருவரையும் காணவில்லை
காங்கிரஸின் உச்ச தலைவர் இருந்த இடத்தில் உள்ளூர் தலைவர்களை காணவே இல்லை,
இருந்த திருநாவுக்கரசரும் நடராஜனோடு குலாவிகொண்டிருந்தார்
நடராஜனும், திருநாவுக்கரசரும் ஜெயலலிதாவின் பெரும் எதிரிகள் , இருவரையும் ஓட விரட்டியவர் ஜெயலலிதா என்பது இன்னொரு விஷயம்.
அந்த இடத்தில் அகில இந்திய செய்திதொடர்பாளர் குஷ்பூவினையும் காணவில்லை. இது பெரும் தவறு.
ஒரு செய்தி தொடர்பாளர் இல்லாமல் எப்படி காங்கிரஸ் கட்சியின் உச்சம் அங்கு இருந்தது என்ற கேள்விக்கும் பதிலில்லை
இவ்வாறாக ஜெயலலிதா அடக்கம் நடந்தது.
உறுதியாக சொல்லலாம் அடக்கம் நடந்தது ஜெயலலிதாவிற்கு மட்டுமல்ல அந்த குழியில் தமிழக காங்கிரசையும் புதைத்தாகிவிட்டது.
1940களில் அவர் வசனம் எழுதும்பொழுது அவர் அவரை கண்டார்
வாய்ப்பு தேடும் நடிகனாக, நெற்றில் பட்டையும், கழுத்தில் ருத்ராட்சமாக வந்து நின்றார் அவர். அந்த பிரமாத வசனகர்த்தா தன் படத்தில் எழுதமாட்டாரா? என தவமிருந்தார்
இவரும் வசனங்கள் எழுதினார், பல படங்கள் ஹிட், மெகா ஹிட்
நட்பு துளித்து தளிர்த்தது, இவர் இருந்த கட்சிக்கே அவரும் வந்தார், பட்டை, ருத்ராட்சம் எல்லாம் மறைந்தது,
பின் புரட்சி நடிகர் என அடைமொழியோடு அழைக்கபட்டார்.
அவரை முன்னிறுத்தி கட்சி வளர்த்தார்கள், ஆட்சியும் பிடித்தார்கள். நிச்சயம் அந்த நடிகர்தான் வெற்றிக்கு முக்கியம்,ஆனால் நடிகரை இயக்கியவர் நிச்சயம் அவர்.
விதி விளையாடிற்று, புரட்சி நடிகர், புரட்சி தலைவரானார், தனி கட்சி கண்டார், போதா குறைக்கு புரட்சி தலைவியும் உருவாக்கிவிட்டு மறைந்தார்
அந்த புரட்சி தலைவியும் இப்போது இல்லை
மன்னார்குடியிலிருந்து வந்தவர்கள் இப்போது கோட்டையினை பிடிக்க போராடிகொண்டிருக்கின்றார்களாம்
அந்த கலைஞரின் மனம் எப்படி சிந்தித்துகொண்டிருக்கும்?
அவர் மனதில் எவ்வளவு சம்பவம் ஓடிகொண்டிருக்கும், நிறைய இருக்கலாம்
நம் மனதில் ஓடுவது இப்படி
சேலம் மார்டன் தியேட்டர்சில் அவரை சந்தித்ததும், அவரை அண்ணாவிடம் கொண்டு சேர்த்ததும் முதல் தவறு
எம்.ஆர் ராதா சுட தெரியாமல் சுட்டது அடுத்த தவறு
மைசூரில் இருந்து சந்தியா நடிக்க வந்தது இன்னொரு விதி
எல்லாம் சேர்ந்து ஆட்டிகொண்டிருக்கின்றது.
சசிகலா மீது ஆயிரம் விமர்சனங்கள், கேள்விகள், கண்டனங்கள் இன்னபிற ஏராளம், எது நன்றி? எது நட்பு? எது தியாகம்? என பல சர்ச்சைகள்.
அதில் திமுகவின் அன்பழகன் எவ்வளவு உயர்ந்த மனிதர் என்பது இப்போது விளங்கி கொண்டிருக்கின்றது
ஆக திமுகவினரே கலைஞருக்கு படமும், சிலையும் வைக்கும் இடமெல்லாம் அந்த அப்பாவி மனிதனுக்கு ஒரு சின்ன சிலையாவது (இனியாவது) வைத்து விடுங்கள்,
இல்லாவிட்டால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது
மத்திய அரசு, சிங்கள அரசினினை கண்டித்து எனது தலைமையில் ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு
போன வாரம்தானே மோடியினை ஆதரிக்கின்றேன் என்றீர்கள், இரு நாட்களுக்கு முன்பு கூட கவர்ணரை சந்தித்து நன்றாகத்தானே பேசினீர்கள்
# என்னாச்சி அங்கிள் உங்களுக்கு?
அதனை விட மிக பயங்கர புயல் ஒன்று அதிமுக பொதுசெயலாளர் பதவிக்காக உருவாகிகொண்டிருக்கின்றது.
அமெரிக்காவில் அகதளம் செய்கிறார் டிரம்ப், அந்த ஒப்பந்தம் ரத்து, இந்த உடன்படிக்கை ரத்து, என ஏகபட்ட ரத்துக்கள்
அமெரிக்க அதிபருக்கான பிரத்யோக புதுவிமானம் தயாரிக்கும் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டாராம்
இன்னும் ஏராளமான ஒப்பந்தங்களை ரத்து செய்யபோவதாக அறிவித்திருப்பது உலகினை கவலை கொள்ள செய்கின்றது, ஒருவருக்கும் மிக பெரும் கவலை
அது டிரம்பின் தற்போதைய மனைவிக்கு,
மனிதர் இதே வேகத்தில் தன்னையும் ரத்து செய்துவிட கூடாது எனும் அச்சம்,
ஏற்கனவே டிரம்ப் முதல் இரு மனைவிகளை ரத்து செய்தவர் என்பதால் அம்மணிக்கு அச்சம் கூடுகின்றது
அது நடிகரால் தொடங்கபட்ட கட்சிதான், நடிகையால் வழிநடத்தபட்ட கட்சிதான்
அதற்காக அங்கு எல்லோருமே நடிகராக இருந்தால் எப்படி?
எப்படியெல்லாம் நடித்திருக்கின்றார்கள் என்ற சாயம் வெளுத்துகொண்டிருக்கின்றது