அஞ்சலி போதுமே

நாடு இருந்தால்தான் இங்கு ஆரியம் திராவிடம் தலித்தியம் பெரியாரியம் அம்பேத்காரியம் வெங்காயம் ஆதிதமிழரியம் , இட ஒதுக்கீடு தட ஒதுக்கீடு இன்னும் ஏகபட்ட இம்சைகள் எல்லாம் பேசமுடியும்

உண்மையில் இம்மாதிரி இம்சைகளுக்கு வாழ்வு அளித்துகொண்டிருப்பது இந்தியா எனும் மாபெரும் நாடே

ஒருவேளை இவர்கள் நினைத்தது போல தனி திராவிட நாடோ தனி தமிழ்நாடோ, தனி தலித்நாடோ கிடைத்தால் என்னாகும்?

ஒன்றும் ஆகாது இவர்கள் அரசியல் செய்ய ஒன்றுமே இருக்காது, தலைவெடித்து செத்துவிடுவார்கள்

தலை என்ன? இதோ காஷ்மீரில் நிகழ்ந்தது போல அனுதினமும் அவர்கள் நாட்டிலும் நடக்கும், ஏகபட்ட தொல்லைகள் வரும்

கொள்கை புடலங்காய் எல்லாம் வேறு, யதார்த்தம் வேறு

அதனால் இந்தியா எனும் மாபெரும் நாடே நீங்கள் ஏராளமான அரசியல் செய்ய வாய்பளித்திருக்கின்றது, அது இல்லை என்றால் உங்களுக்கு பிழைப்பே இல்லை

மனசாட்சியினை ஆழ கேட்டுபாருங்கள் உண்மை விளங்கும்

ஏ இந்திய தேசியமே ஏ தமிழர் விரோத தலித் விரோத இன்னும் ஏகபட்ட விரோதங்களை சொல்லி உங்களால் பிழைப்பு நடத்த முடிகின்றது

இன்னொரு நாடென்றால் சாத்தியமா? ஏன் தனிநாடானாலும் சாத்தியமா? சத்தியமாக இல்லை

இந்தியா என்றொரு நாடு இருப்பதால் உங்களால் ஆயிரம் கேள்விகளை கேட்டு அரசியல் செய்யமுடிகின்றது,

அதுஇல்லாவிடில் எங்கே சென்று கேட்பீர்கள்? எப்படி பிழைப்பீர்கள்?

சீனனிடமோ, பாகிஸ்தானியிடமோ ஏன் ஒருவேளை அமெரிக்காவே ஆளவந்தாலும் ஒரு வார்த்தை பேசமுடியும்? தூக்கி போட்டு மிதித்தே கொல்வார்கள்

பாகிஸ்தானில் இருந்து பிரிந்தால் கிழித்துவிடுமோம் என்ற வங்க தேசம் இன்று உலகின் தரித்திர தேசங்களில் ஒன்றாயிற்று

ஆம் ஒரு எதிரி இருக்கும் வரைதான் பிழைக்க முடியும், நீங்கள் இந்திய தேசியம் இருக்கும்வரைதான் அதை குறை சொல்லி நீங்கள் வாழமுடியும்

இல்லாவிடில் நீரில்லா மீன் போல் ஆகிவிடுவீர்கள்

இந்தியா இல்லாவிட்டால் என்ன பேசுவீர்கள்? என்ன அரசியல் செய்து கிழிப்பீர்கள்?

அதனால் அந்த மாபெரும் இந்தியாவிற்காக உயிர்விட்டு அதைகாத்து அப்படியே உங்கள் பிழைப்பையும் காக்க உயிர்விட்டிருக்கும் அந்த உத்தமர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைதியாய் இருங்கள்

இல்லாவிடில் உங்களுக்கும் அந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கும் என்ன வித்தியாசம்?