அடித்தளித்திலிருந்து பெரும் பதவிக்கு வந்த கோபி அன்னான் இறந்துவிட்டார்
ஒடுக்கபட்ட இனத்திலிருந்து மிக உயரம் பெற்றவர்கள் எல்லாம் விடைபெறும் நேரம் போலிருக்கின்றது
கலைஞர் போலவே அடித்தளித்திலிருந்து பெரும் பதவிக்கு வந்த கோபி அன்னானும் இறந்துவிட்டார்
அவர் ஆப்ரிக்காவின் கானா நாட்டுக்காரர், மிக பின் தங்கிய நாடு அது. அதுவும் கருப்பினம் என்பது உலகில் சந்தித்த போராட்டம் என்பது மிக மிக கொடுமையானது
ஐ.நா சபை எனும் மிகபெரிய பதவிக்கு வந்த ஆப்ரிக்க கருப்பர் அவர் , 1997 முதல் 2006 வரை இருமுறை அப்பதவியில் இருந்தவர் அவர்
நோபல் பரிசும் உலக அமைதிக்காக அவருக்கு கொடுகபட்டது
உண்மையில் உலக அமைதிக்காக அவர் சில காரியங்களை செய்தார் ஆயினும் ஈராக் போர் மற்றும் யுகோஸ்லேவிய சர்ச்சைகளில் அவர் பெயர் இழுபட்டது
ஈராக் போர் அவரின் சக்த்திக்கு அப்பாற்பட்டு நடந்தது, யுகோஸ்லேவிய சர்ச்சை இனவெறி சம்பந்தபட்டது
ஆப்கன் போர் உள்ளிட்ட காலங்களில் சிறப்பாக செயல்பட்டார் அன்னான்
ஏய்ட்ஸ் உலகில் மிக வேகமாக பரவிய காலங்களில் அதை தடுக்க கோபி அன்னானின் சிற்ப்பான பணி அவருக்கு பெரும் பெயரை பெற்று கொடுத்தது, பதவி சென்றபின்பும் சிரியாவில் சிறப்பு தூதராக பணியாற்றினார்
இன்று மரித்துவிட்ட அவருக்கு உலகம் பெரும் அஞ்சலி செலுத்தி வழியனுப்புகின்றது, எல்லா நாட்டு தலைவர்களும் அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றனர்
உலக பத்திரிகைகள் இப்படி புகழாரம் சூட்டுகின்றன
“உலகில் எங்கெல்லாம் தேவை அல்லது பாதிப்பு ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களின்பால் ஆழ்ந்த இரக்கமும், அனுதாபமும் கொண்டார் அவர், அவர்களின் துயர்துடைக்க பாடுபட்டார். எப்போதும் தன்னை முன்னிறுத்தாமல், மற்றவர்களின் நலனை முன்னிறுத்தி அன்பு மற்றும் பரிவுடன் செயல்பட்டார்”
உண்மையான வரிகள் அவை
மிக ஒடுக்கபட்ட இனத்தில் இருந்து வந்து, பெரும் பதவிகளை வகித்த அந்த மனிதனுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.