அடிவாங்கி, தெருவில் பராரியாய் அலைந்து வளர்ந்த கட்சி திமுக
கண்ணீர் துளிகள், …சி மகன்கள் என்றெல்லாம் திமுகவினரை சொன்னார் பெரியார், நாங்கள் அவரின் பிள்ளைகள் என சொல்லி கடந்து சென்றது திமுக
நான்சென்ஸ் என திட்டினார் நேரு, உமக்கு நோ சென்ஸ் என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருந்தது திமுக
தேசவிரோத கட்சி என்றது காங்கிரஸ், காசுவிரோத கட்சி நாங்கள் என பதிலுக்கு கலாய்த்தது திமுக
கூத்தாடிகளை கொண்டு நாடகம் போடும் கூத்துகட்சி என்றார்கள், ஆம் இங்கு இருப்பவன் எல்லாம் பாட்டாளி, கூலி அவனில் ஒருவனான கூத்தாடியும் இருக்கின்றான் அவ்வளவுதான் என கண்ணீரை துடைத்தது திமுக
எந்த இடத்திலும் அது கவுரவம், மரியாதை இன்னபிற விஷயங்களை எதிர்பார்க்கவில்லை, ஆரம்பத்தில் அப்படி ஒன்று அதற்கு இல்லவும் இல்லை
ராஜாஜியுடனும், இன்னும் சிலருடனும் கைகோர்க்கும் அளவிற்கு அது இறங்கி செல்லவும் தயாராக இருந்தது
அப்படி அடிவாங்கி, தெருவில் பராரியாய் அலைந்து வளர்ந்த கட்சி திமுக
இதனால்தான் ஒரு இடத்தில் தன்னை வரம்பு மீறி விமர்சிக்க கலைஞர் சொன்னார் ” விவரம் தெரிந்த வயதில் இருந்தே சாதியால் இழிந்த என்னை தூற்றினார்கள், நான் வளர வளர பட்ட அவமானமும், இழிவும் கொஞ்சமல்ல
இந்த தூற்றல்கள் எல்லாம் அதில் கொஞ்சம் கூட வராது என்பதால் கடந்து செல்கின்றேன்”
இப்படி கொஞ்சமும் மானம், மரியாதை, கவுரவம் என எதிர்பாராமல் போராட்டம், சிந்தனை என வளர்ந்த கட்சி திமுக
பின்பு மரியாதையும், கவுரவமும் அதனை தேடி வந்தன
அப்படிபட்ட கட்சியின் செயல்தலைவர் திமுக மாண்பிற்கும், மரியாதைக்கும் இழுக்கு என கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கின்றாராம்
மானமும் மரியாதையும் என்று நிரம்ப இருந்தது திமுகவிற்கு?