அடுத்த தேர்தலிலும் பழனிச்சாமியே முதல்வர் என்றொரு கணிப்பு வந்தால் என்னாகும்?

அடுத்த தேர்தலிலும் பழனிச்சாமியே முதல்வர் என்றொரு கணிப்பு வந்தால் என்னாகும்? எப்படி அஞ்சி நடுங்குவோம்?

அப்படித்தான் இன்னும் இரு நாட்களில் மிக கனமழை பெய்யும் என்ற செய்தி கேரளமக்களை திகைக்க வைக்கின்றது

அவர்கள் மழையோடு வாழ பழகியவர்கள்தான், மழை அவர்களின் அன்றாட வாடிக்கைதான், ஆனால் அவர்களே திகைக்கின்றார்கள் என்றால் மழையின் வீச்சை உணரமுடிகின்றது

இதற்கு மேல் தாங்கமுடியாது என்ற நிலையில் அவர்கள் சிக்கி இருக்க, இன்னும் மழை உண்டு என்பது மிக மிரட்டலான செய்தி

நாடு முழுக்க இருந்து அந்த சகோதரர்களுக்கு உதவிகள் குவிகின்றன, தமிழர்களும் அள்ளி கொடுக்கின்றனர்

மிக கருணையான இறைவன் இன்னும் மழை வலுக்காமல் அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கட்டும்


பாஜகவினையும் வாஜ்பாயினையும் அலற செய்தவர் அம்மா, அவர்களுக்கு சிம்ம சொப்பணமாக இருந்தார் ஜே : கெட்டுப்போன ரத்தங்கள்

எங்கே? பழனிச்சாமியினை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்?


Image may contain: one or more people and people sitting“அம்மா நீயும் ஏழை, அதனால் நானும் ஏழை

இந்த பணக்கார அமெரிக்க டாலர் ஏறினால் என்ன? இறங்கினால் என்ன?

ஏழைகளுக்கு அதை பற்றி கவலைபட என்னம்மா இருக்கின்றது?

இதை சொன்னால் பலருக்கு புரிவதே இல்லை”


பிரபாகரன் புனிதன் என சொல்லிகொண்டிருந்த கூட்டத்தை களையெடுத்தது போலவே, திமுக மகா புனிதமான கட்சி என சொல்லி மல்லுக்கு நிற்கும் பழைய தும்பிகளையும் களையெடுத்து கொண்டிருக்கின்றேன்

நாட்டுபற்றாளர்கள், ரசனை மிக்கவர்கள், கட்சி வெறி இல்லா சாமான்யர்கள் கொஞ்சபேர் இருந்தாலும் போதும்.