அட்சய திரிதியியை வாழ்த்துக்கள்
சயம் என்றால் தேய்தல் என்று பொருள், அட்சயம் என்றால் தேயாத, குறையாத என்ற பொருள். பாரதத்தில் பாஞ்சாலியிடமும் மணிமேகலையில் மணிமேகலையிடமும் அப்படி ஒரு அட்சய பாத்திரம் இருந்ததாக சொல்கின்றது குறிப்புகள்
அம்மாவசைக்கு அடுத்த மூன்றாம் நாள் திரிதியை, திரி என்றால் மூன்று என பொருள். ஆங்கிலத்திலும் அதுவேதான்.
இந்த சித்திரை மாத பவுர்ணமி போலவே இந்த பிறை தோன்றும் திரிதியையும் விஷேஷமானது
அள்ள அள்ள குறையாத திரிதியை என இந்த அட்சய திரிதியை கொண்டாடபடுகின்றது
இந்நாளில் பரசுராமர் பிறந்தார். கண்ணன் பாஞ்சாலிக்கு அட்ச்யபாத்திரம் அளித்தார், இதே நாளில் பாஞ்சாலி சேலை துரியோதனன் அவையில் வளர்ந்தது. குசேலனுக்கு செல்வம் கிடைத்தது என ஏகபட்ட விஷயங்கள் உண்டு
காவேரி போல் சொர்க்கத்தில் அடைபட்டு கிடந்த கங்கையினை பகீரதன் என்பவன் இந்நாளில்தான் அழைத்து வந்தானாம்
செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின் நாள் இது என்றும் சில குறிப்புகள் சொல்கின்றன. பல இடங்களில் மகாலட்சுமி பூஜையும் நடக்கும்
சமணர் கூட அவர்களின் ஒரு தீர்த்தங்காரர் அவதார நாள் என கொண்டாடுகின்றார்கள்
இந்நாளின் தத்துவம் வேறு ஒன்றுமல்ல, அட்சயம் என்றால் குறையாது என பொருள், அந்நாளில் அள்ளிகொடுங்கள் இல்லாதவருக்கு கொடுங்கள் உங்களுக்கு ஒன்றும் குறைவுபடாது என்பதேயன்றி வேறல்ல
இந்நாளில் தான தர்மம் செய்தால் பெரும் புண்ணியம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் உண்டு
அக்காலத்தில் இந்நாளில் பித்ருக்கள் எனப்படும் முன்னோருக்கு பூஜை செய்துவிட்டு வம்சம் செழிக்க மணப்பெண்ணை முதன் முதலாக ஆலயத்தில் பார்க்கும் சம்பிரதாயம் எல்லாம் நடந்திருக்கின்றன
வசந்தகால தொடக்கமாக இக்காலம் வாங்கி மகிழும் பண்டிகையா அன்று இருந்தது. இந்நாளில் வாங்கினால் அப்பொருள் பெருகிகொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை
இந்நாளில் கால்நடைகள் வாங்குவார்கள் என்பது அக்கால வழக்கம், அது பலுகிபெருகுமாம்
கால்நடை என்றல்ல உடை, மனை, பாத்திரம், அரிசி, உப்பு என மகா முக்கியமான பொருளை வாங்குவார்கள் இதில் கடைசியாக வந்ததுதான் தங்கம்
ஆனால் இன்று அட்சய திரிதியை என்றாலே தங்கம் வாங்கும் நாள் என வியாபார உலகில் மாற்றிவிட்டார்கள்
இன்று தங்கம் வாங்கினால் அது பெருகும் என்ற நம்பிக்கை வந்தாயிற்று, தங்கம் மட்டுமல்ல எது வாங்கினாலும் பெருகும் என்பதுதான் பழங்கால நம்பிக்கை
தங்கம் மட்டுமல்ல எது அவசியமோ அது எல்லாம் வாங்கலாம்
அட்சய திரிதியியையினை கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துக்கள்
தமிழகத்தில் அவசியம் கொண்டாட வேண்டிய இடம் காவேரிகரை, அங்கு கொஞ்சம் நீர் வைத்து பூஜிப்போம்
காவேரி பெருகி வரட்டும்