அட்டகாசமாக நகர்கின்றது அரசு

சென்னையில் சில இடங்களை தவிர சிக்கல் இல்லை என்கின்றன செய்திகள், அரசின் மீது பெரும் குற்றசாட்டு இல்லை

ஆச்சரியமாக அது உண்மை, இந்த அரசு அனுபவமே இல்லாதவர்களால் இயக்கபட்டாலும் அரசு இயந்திரம் அட்டகாசமாக இயங்கத்தான் செய்கின்றது

மத்திய அரசின் ஒத்துழைப்பு இருக்கின்றது, தமிழக அரசு அதன் வழிகாட்டலில் சிக்கல் இல்லாமல் இயங்குகின்றது.

ஒரு சிக்கல் இல்லை, ஒரு இடத்திலும் பழனிச்சாமி அரசு திணறியதாக தெரியவில்லை. அட்டகாசமாக நகர்கின்றது அரசு.

அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை, அப்படி நடத்தும் திட்டம் எதிர்கட்சிகளுக்கு இருப்பதாகவும் தெரியவில்லை

தடையில்லாமல் அரசு இப்படியே இயங்கிவிட்டால் அதன் பின் எங்கள் ஆட்சிக்கு என்ன குறை என அதிமுகவினர் இறங்கிவிடுவார்கள்.

சிக்கல் இல்லாத ஆட்சிக்கு இருக்கும் ஓரிரு சிக்கல்களை பெரிதாக்கி ஆட்டம்போட்டால்தான் எதிர்கட்சி நிலைக்க முடியும்

எதிர்கட்சி எனும் மீன் அப்பொழுதுதான் உயிரோடு இருக்க முடியும், அது நீந்திகொண்டே இருக்கவேண்டும்

பொன்னான காமராஜர் ஆட்சியினை திமுக அப்படித்தான் விரட்டியது, அது அந்த திமுக‌

இப்பொழுது இருக்கும் திமுக இப்படியே இருந்துவிட்டால் இதுதான் காமராஜர் கண்ட ஆட்சி என பழனிச்சாமி கோஷ்டி இறங்கினாலும் ஆச்சரியமில்லை

நிச்சயம் பழனிச்சாமி கோஷ்டிக்கு இந்த சாகசம் தெரியாது, ஆனால் யாரோ மிக நன்றாக இயக்குகின்றார்கள்.

தங்கள் முன்னிருக்கும் சவால் தெரியாமல் , தங்கள் அடையாளத்திற்கு அவசியம் இல்லாமல் போகும் நிலை அருகே வந்துகொண்டிருக்கும் ஆபத்து தெரியாமல் அசால்ட்டாக இருக்கின்றது திமுக‌