அட்டகாச அரசியல் செய்கின்றது எச்.ராசா கோஷ்டி
காமராஜரை ஆண்மை இல்லாதவர் என்றும், பெண் கொடுக்க கூட யாருமில்லா நபர் என்றும் இன்னும் என்னவெல்லாமோ பேசினார்கள்
அவைகள் எல்லாம் அச்சில் ஏற்றமுடியா ரகம்
ராஜாஜி பற்றி பேசிய பேச்செல்லாம் காதுகொடுக்க கேட்க முடியாத வகை
ராமசந்திரன், ஜெயலலிதா எல்லாம் அவதூறாக்கபட்டது தனி கணக்கு, புத்தமாக எழுதினால் 100 புத்தகம் வரும் அவ்வளவு ஆபாசம்
அந்த கட்சியினர்தான் இன்று ராசாவும், எஸ்வீ சேகரும் ஆபாசமாக பேசிவிட்டார்கள் என குதிக்கின்றார்களாம்
காற்று எப்பொழுதும் ஒரே திசையிலா அடிக்கும்?
ஆனால் அதே நேரம் முன்னொரு காலத்தில் தன் சாதி குறித்தும், தன் பிறப்பு குறித்தும் எவ்வளவோ அசிங்கமான கதைகள் கட்டிவிடபட்டபொழுதும் “கண்களை துடைத்துகொண்டு இதெல்லாம் நான் பிறந்ததிலிருந்து கேட்ட கதைகள், அந்த அவதூறை தாண்டித்தான் இந்த உயரத்திற்கு வந்தான் இந்த கருணாநிதி” என பெருமூச்சுடன் கடந்து சென்ற காட்சிகளும் உண்டு
அசிங்கத்தை அசிங்கத்தால் எதிர்த்தால் பெரும் நாற்றமே எடுக்கும், அசிங்கத்தை கண்டு கொள்ளாமல் நகர்வதே நல்வழி என்பார்கள்
இப்பொழுது அசிங்கத்தை அசிங்கத்தால் எதிர்ப்போம் என திமுக மட்டமாக களமிறங்குகின்றது
எச்சில் துப்பும் போராட்டம் எல்லாம் நடத்துகின்றார்களாம்
அதை காய்ந்துகிடக்கும் ஆறுகளிலாவது செய்யட்டும், வெறுமனே துப்பி என்னாக போகின்றது?
அதே தவறுதான்
வீணாக எச்.ராசா கோஷ்டியினை பெரிய ஆளாக ஆக்கிகொண்டிருக்கின்றார்கள், தங்களை அறியாமல் செய்யும் தவறு இது
அன்று காமாராஜரை சீண்டி திமுக எப்படி வளர்ந்ததோ அதே நுட்பத்தை கையாண்டு அட்டகாச அரசியல் செய்கின்றது எச்.ராசா கோஷ்டி