அட்டை கத்தி வீரன்
“ராமசந்திரனை புரட்சி நடிகர் என சொன்னது கருணாநிதி, நீ நல்லவன் என்றால் அவரை பிடித்து கேள், வீணாக எம் தலைவன் ராமசந்திரனை பற்றி பேசாதே..” என சில முதியவர்கள் ஒரே அழிச்சாட்டியம்
கலைஞர் என்ன பட்டம் கொடுத்தார், நன்றாக கவனிக்கவும் “புரட்சி நடிகர்” என்றுதான் சொன்னார்.
எஸ்.எஸ் ராஜேந்திரனை “லட்சிய நடிகர்” என்றார்.
புரட்சி வேடத்தில் நடித்த நடிகனை புரட்சி நடிகன் என சொன்னது தவறா?
பின்பு அவரை புரட்சி தலைவர் என அவரின் அடிப்பொடிகள் தான் அழைத்தன, ராமசந்திரனும் கள்ளசிரிப்பு சிரித்தார்
“லட்சிய நடிகரை” “லட்சிய தலைவன்” என அழைக்க யாருமில்லை
பின்பு இந்த புரட்சி தலைவன் இம்சைகள் அதிகரிக்கவும் கலைஞருக்கே தர்மசங்கடமாயிற்று, இவனை புரட்சி நடிகர் என்றுதானே சொன்னேன் என சொன்னது யார் காதிலும் விழவில்லை
அதன் பின் கலைஞர் தன் தவறை உணர்ந்து “அட்டை கத்தி வீரன்” என பல விஷயங்களை சொன்னார்.
அந்த கட்சியினை நடிகர் கட்சி என்றே நெடுங்காலம் அழைத்தார், அவர் புரட்சி தலைவர் என கலைஞர் ஒரு காலமும் சொன்னதே இல்லை. புரட்சி நடிகர் என்றார் பின்பு அதனையும் நிறுத்தினார்
நாங்கள் கலைஞர் தன் தவறை உணர்ந்து அவர் இரண்டாவதாக சொன்னதைத்தான், அதாவது கடைசியாக சொன்னதைத்தான் பின்பற்றுகின்றோம்
உங்கள் தலைவனும் கடைசிகாலத்தில் ஜெயலலிதா பற்றி மிக வருத்தபட்டு எழுதிய கடிதங்கள் உண்டு, அவன் மனம் திருந்தி எழுதியது, வருந்தி எழுதியது
ஜெயா எவ்வளவு ஆபத்தானவர் என கண்ணீரோடு எழுதியது
அவ்வழியில் நீங்கள் நின்றிருந்தால் இன்று இந்த சின்னம்மா எல்லாம், பழனிச்சாமி எல்லாம் உருவாகியிருப்பாரா?
ஆக ஒரு அனுபவசாலி கடைசியில் சொன்னதத்தான் பின்பற்ற வேண்டும், அப்படி “அட்டை கத்தி வீரன்” என கலைஞர் சொன்னதை நாங்கள் பின்பற்றுவோம்
போதுமா?