அணுகுண்டை போக்ரானில் சோதித்தது மே 11ம் நாள்

Image may contain: fire, text and food

 

பாஜக அப்பொழுது ஆட்சிக்கு வந்திருந்தது, பெரும் ஆரவாரத்தோடும் , கடும் எதிர்ப்பார்ப்போடும் ஆட்சிக்கு வந்தார்கள்

வாஜ்பாய் பிரதமராய் இருந்தார், கூட்டணி ஆட்சி என்றாலும் இதே விளம்பர அழிச்சாட்டியத்திற்கு குறைவில்லை

நாங்கள் பாகிஸ்தானை என்ன செய்யபோகின்றோம் தெரியுமா? என அணுகுண்டை போக்ரானில் சோதித்தார்கள்

இதே மே 11ம் நாள்

என்னாயிற்று? விளைவுகள் பயங்கரமானவை, கொள்ளிகட்டையினை எடுத்து தலையில் சொரிந்தது போலாயிற்று

அதாவது இந்தியா 1974லே அணுகுண்டை வெடிக்க செய்து தன்னை அணுசக்தி நாடாக காட்டிற்று, அப்பொழுது சோவியத் பாதுகாப்பெல்லாம் இருந்தது

இந்தியாவிடம் அணுகுண்டு கிடைத்தவுடனே சீனாவின் மாவோ பல்டி அடித்து அமெரிக்க பக்கம் சாய்ந்துவிட்டார்

பாகிஸ்தானும் அணுகுண்டு தயாரிப்பதில் ஈடுபட்டு தடுக்கபட்டது, ஆனால் அவர்களும் திருட்டு தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தார்கள் எனினும் வெடிக்க வாய்ப்பு இன்றி அல்லது கடைசிகட்ட தொழில்நுட்ப வசதியின்றி இருந்தார்கள்

1990கள் என்பது அமெரிக்கா அப்பொழுது இந்தியாவின் விண்வெளி வெற்றிகளுக்கு செக் வைக்க அலைந்த காலம்

இப்படி பட்ட காலத்தில்தான் எல்லோருக்கும் வாய்ப்பினை வாஜ்பாய் திறந்துவிட்டார், பெரும் சிக்கலை தொடங்கி வைத்தார்

இதுதான் வாய்ப்பு என பாகிஸ்தான் தன் திருட்டு அணுகுண்டை சீனாவின் உதவியோடு வெடித்தது. அந்த வாய்ப்பினை உருவாக்கி கொடுத்தது வாஜ்பாய்

வாய்பிற்காக காத்திருந்த அமெரிக்கா பொருளாதார தடைகளை வீசிற்று

வீண் விளம்பத்திற்காக பாஜக செய்த விஷயம் நாட்டை கடுமையாக பாதித்தது

பாகிஸ்தானிடம் அணுகுண்டு உண்டு என சொல்ல செய்ததை தவிர ஒரு சாதனையும் அது செய்யவில்லை , தேசம் சிக்கியது

அதன்பின் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு பஸ் விட்டு நாங்கள் சமாதானமாகிவிட்டோம் என உலகிற்கு சொல்லபார்த்தார், அந்த பஸ் நிறைய தீவிரவாதிகள் வந்து கார்கிலில் பதுங்கியதுதான் நடந்தது

கார்கில் போரில் பாகிஸ்தான் துணிந்து நின்றது, ஆம் எங்களிடம் அணுகுண்டு உண்டு என்ற தைரியம் அது

அப்பொழுது பாகிஸ்தானை செய்யவதறிமாயல் பார்த்துகொண்டிருந்தது இந்தியா, எனினும் கார்கிலை மிக பெரும் உயிரிழப்பில் மீட்டோம்

வாஜ்பாயின் அட்டகாச சர்ச்சை தொடர்ந்து இந்தியா ஒரு வில்லங்கமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியதாயிற்று

அது இந்தியா அடுத்த அணுகுண்டை சோதிக்க தடை என்ற நிலைக்கு வந்தது

அந்த ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பு வந்தது, முதல் முதலாக அதனை எதிர்த்த அரசியல்வாதி யார் தெரியுமா? ஜெயலலிதா

ஆம் ஆச்சரியமாக இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் அணுகுண்டு கரங்கள் கட்டபடும் என அவர் சொன்னார், ஆனால் கண்டுகொள்ள யாருமில்லை, இந்தியா சிக்கிவிட்டது

இன்றும் மோடி அரசு அமைதியாக இருக்க காரணம் அதுதான்

மன்மோகன் காலங்களில் இந்தியா பொருளாதார தடையிலிருந்து சாதுர்யமாக மீண்டது, மன்மோகன் அதனை செய்தார்

பொருளாதார தடை என்பது அவ்வளவு கொடூரமானது, ஈரானும் ரஷ்யாவும் தங்கள் எண்ணெய் உற்பத்தியால் சமாளித்தன‌

வடகொரியா முடியாமல் சரணடைந்தது, இந்தியாவிலும் எண்ணெய் வளம் இல்லை

ஒருவழியாக இச்சிக்கலை மன்மோகன் தீர்த்துவைத்து நாட்டை ஓரளவு நிமிர்த்தி வைத்தார்

இப்பொழுது மோடி வந்து அணுகுண்டு சோதனை செய்து சிக்கலை ஏற்படுத்தவில்லை, காரணம் வாஜ்பாய் வெடித்ததிலே உலகம் இந்திய‌ கையினை முறுக்கி கட்டியாயிற்று

இதனால் நவீன அணு ஆயுதங்களை சோதிக்கமுடியா நிலையில் இந்தியா இருக்கின்றது, இல்லாவிட்டால் மோடி சும்மா இருப்பாரா?

வாஜ்பாயின் செயல் காலமறிந்து, இடமறிந்து உலகறிந்து செய்யபட்ட சோதனை அல்ல‌

எதற்கோ செய்யபோய் எங்கோ சுற்றி அது ஏற்படுத்திய விளைவுகள் ஏராளம்