அண்ணன் யோசிச்சிட்டே இருக்கேன்

தம்பி, ஒண்ணு நுட்பமா விளங்கிகிடனும், நடக்குறது நாடாளுமன்றத்துக்கான தேர்தல், நாம போட்டி போட்டு 40 தொகுதிலியும் ஜெயிச்சிட்டா நம்மள பிரதமராக்கிருவாங்க‌

அப்புறம் தமிழர் பிரச்சினைய பேசமுடியாது, காஷ்மீர பாரு, பீகார பாருண்ணு தமிழர் பிரச்சினையில இருந்து நம்மள காலிபண்ணிருவானுக‌

ஈழவிடுதலைக்காக அண்ணன் கொடுத்த துப்பாக்கி பயிற்சி எல்லாம் நான் பாகிஸ்தான் போரில் வீணாக்கணும்

அதுமட்டுமா ராஜபக்சே வந்தா கைகொடுக்கணும் கும்பிடனும், அதுதான் இவங்க திட்டம், தாங்குமா? நடக்குமா?

ஈழபிரச்சினை காவேரின்னு நமக்கு ஏகபட்ட வேலை இருக்கு அதை எல்லாம் காஷ்மீர் , சிக்கிம் பார்டர் சிந்து நதின்னு திருப்பிருவானுக‌

தமிழ்நாடெல்லாம் விவசாயம் செய்ய வேண்டிய, ஆடுமாடு மேய்க்க வேண்டிய நான் 4 நாட்டுக்கு போகணும், பார்லிமென்ட் போகணும் இப்படி சிக்க வச்சிருவானுக‌

இதெல்லாம் நுட்பமான தந்திரம் தம்பி, தமிழருக்காக பேசுற ஒரே ஆளு சீமான், அவன பிரதமராக்கி இந்திய தேசியத்துக்கு பொதுவா பேசவச்சிட்டா இந்த இனம் நாதியற்ற இனமாகி போயிரும்

இதுக்குத்தான் தேர்தல்ல இருந்து ரஜினி விலகி நம்மள சிக்க வைக்க பார்க்குறாறு, தம்பிகள் இதுபற்றி பேசவேண்டாம் இந்த பெரும் தமிழர் விரோத தந்திரத்த எப்படி முறியடிக்கலாமுண்ணு அண்ணன் யோசிச்சிட்டே இருக்கேன்”