அண்ணாவின் இதயத்தோடு மட்டுமல்ல அந்த மோதிரத்துடனும் சென்றுவிட்டார் கலைஞர்

Image may contain: 2 people, people sitting and indoorகலைஞர் தங்க நகை அணிவதில்லை, என்றாவது கழுத்து சங்கிலி, கையில் சங்கிலி எல்லாம் அணிந்து அவரை கண்டதுண்டா

ஆனால் ஒரு மோதிரம் மட்டும் அணிந்திருப்பார், அது சென்னையினை முதன் முதலாக திமுகவிற்கு ஒரு தேர்தலில் பெற்று கொடுத்ததற்காக அண்ணா கொடுத்த பரிசு அது

அதுவரை தமிழகத்தில் வெல்வோம் என்ற நம்பிக்கை திமுகவிற்கு இல்லை, முதல் நம்பிக்கையினை அதுவே கொடுத்தது, அதற்கு மிகபெரும் காரணம் கலைஞர்

இதே கடற்கரையில் அன்று மேடை போட்டு கொண்டாடி மோதிரம் அணிவித்து சொன்னார்

“நான் எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ கூட நகைகடை பக்கம் சென்றதில்லை, முதன் முதலாக நகைகடை வெயிலில் அலைந்து நகைகடை ஏறி இந்த கணையாழி வாங்கி வந்தேன்

அதை இந்த வெற்றியினை கொடுத்த தம்பி கருணாநிதிக்கு பரிசளிக்கின்றேன்”

Image may contain: 1 person, smiling, sunglasses and close-upஅந்த மோதிரம் கடைசி வரை கலைஞர் கையில் இருந்தது, எல்லா மேடைகளிலும் அந்த மோதிரத்தை உருட்டிகொண்டே யோசிக்கும் கலைஞரை கண்டிருக்கலாம்

அண்ணாவின் இதயத்தோடு மட்டுமல்ல அந்த மோதிரத்துடனும் சென்றுவிட்டார் கலைஞர்

எந்த கடற்கரையில் அண்ணா கலைஞரை பாராட்டி அந்த மோதிரத்தை அணிவித்தாரோ அந்த அண்ணா, கலைஞர், அந்த மோதிரம் எல்லாம் அதே கடற்கரையில் மூழ்கிவிட்டார்கள்