அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?
அண்ணாவினை ஏன் சீமான் என்கின்றாய் அப்படி அவர் என்ன சொன்னார் என்றால் ஈழவிவகாரத்திலே அவர் சொன்னதை சொல்லலாம்
அண்ணா காலத்தில் ஈழத்தில் ஆயுதபோராட்டம் இல்லை மாறாக மலையக தமிழர்மேல் தாக்குதல், ஈழதமிழர் மேல் அடக்குமுறை என தொடங்கியிருந்த காலம்
இது பற்றி அன்றைய தமிழக தலைமகனான அண்ணாவிடம் கேட்டார்கள்
அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?
“தமிழருக்கு லங்காபுரியில் சிக்கல் என்றால் சிங்களனுக்கு ஒன்றை சொல்கின்றேன்
4 கோடி தமிழரும் இறங்கி நடந்தால் கடலும் திடல் தானே”
இதற்கு பேரரிஞர் அண்ணாவின் அறிவுசிந்தனை என்றொரு கூட்டம் கைதட்டியது
கவனியுங்கள் , இதில் கடல் திடல் எனும் ரைமிங்கான வார்த்தையினை தவிர ஒன்றுமே சாத்தியமில்லை
4 கோடி பேர் கிளம்பமுடியுமா, கடலை திடலாக்க முடியுமா? நடக்குமா?
ஆனால் அவர் போக்கில் கைதட்டி கொண்டிருந்தார்கள்
அண்ணாவின் புகழ்மிக்க வசனம் “நான் ஆணையிட்டால் ரயில்கள் ஓடாது”
ரயில் ஓடவில்லை என்றால் மக்கள் எப்படி பயணிப்பார்கள்? சரக்கு போக்குவரத்து எப்படி நடக்கும், என்றெல்லாம் கவலையற்ற கூட்டம் அதற்கும் கைதட்டியது
அண்ணாவின் பேச்சுக்களும் எழுத்துக்களும் அப்படித்தான் இருந்தன.
அண்ணாவும் நெப்போலியன் கதையினை எழுதினார், உண்மையில் நெப்போலியனை தோற்கடித்தது யாரென்றால் மக்களட்சியினை முடியாட்சியாக திருப்பியதில் அதிருப்தியான பிரான்ஸ் கவுன்சில் , போப்பாண்டவரை அவன் விரட்டியதால் அதிருப்தியான கத்தோலிக்க மன்னர்கள் அதன் பின் அவன் ரகசியங்களை ஊடுருவி கொடுத்த அந்த ஆஸ்திரிய மனைவி
முக்கியமாக ரஷ்யாவில் அவன் செய்த முட்டாள்தனம்
இப்ப்படி ஏக சிக்கலில் நெப்போலியன் வீழ அண்ணா எப்படி கதையினை முடித்தார் தெரியுமா?
ஒரே மொழி, ஒரே நாடு என்பதெல்லாம் சாத்தியமில்லை என்பதை வீழ்ந்து உலகுக்கு சொன்னான் நெப்போலியன், ஏ ஆரியமே உன்னை எச்சரிகின்றேன்
அட பதர்களா? நெப்போலியன் என்ன பிரெஞ்ச் மொழி வெறியனா இல்லை அகண்ட பிரான்ஸை அமைத்தானா?
ஆட்டோமன் துருக்கியர் பக்கம் அவன் தலைவைத்தே படுக்கவில்லை அவ்வளவு பயம்
அவன் செய்ததெல்லாம் பிரெஞ்ச் ஆங்கில பன்னெடுங்கால யுத்தத்தை தொடர்ந்தான் பிரிட்டிசாருக்கு துணையானவர்களை அடக்க்கினான் கடைசியில் பிரிட்டிசாரால் வீழ்ந்தான்
சமத்துவ புரட்சி பிரான்சும் அவனின் முடியாட்சியினை ரசிக்கவில்லை
ஆக உண்மை ஒன்றிருக்க இல்லாத ஒன்றை எழுதி குழப்பி தமிழகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய அவர் அன்றைய சைமன் என்பதில் மிகை ஏதுமில்லை
ஆனால் ஒரு விஷயம் உண்மை
அண்ணாவுக்கு ஆங்கிலம் அனாசயமாக வந்தது நல்ல வேளையாக சைமனுக்கு வரவில்லை, ஒருவேளை வந்து தொலைத்திருந்தால் இப்பொழுது டிரம்புக்குத்தான் சோதனை வந்திருக்கும்