அண்ணே உங்களுக்கு தமிழ் தேசியம் புரியல…
அண்ணே உங்களுக்கு தமிழ் தேசியம் புரியல, புரிஞ்சிட்டா கண்டிப்பா எங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்க
சரி சொல்லு பார்க்கலாம்
அண்ணே தமிழ்நாடு பல வகையில பாதிக்கபட்டிருக்கு, இந்த திராவிட கட்சிகள் எல்லாம் சீரழிச்சிட்டு, அதனால தமிழ்நாட்டை தமிழரே ஆளனும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அதுதான் எங்க லட்சியம்
சரி திமுக அரசியல் என்ன தேசிய அரசியலா அதுவும் தமிழ் தேசிய அரசியல்தான்டா?
இல்லண்ணே அது திராவிடம்ணு சொல்லி நம்மள ஏமாத்திட்டு
டேய் இந்திய எதிர்த்தது முதல் தமிழ்நாடு பெயர் வைத்தது, தமிழ் மாநாடு நடத்தியது, குறளை முன்னிலைபடுத்தியது, தமிழ்நாட்டுக்கு எவ்வளவோ விஷயங்களை செய்தது திமுக, அது எல்லாம் என்ன திராவிடமா? இதில் என்ன ஏமாந்துட்ட நீ
ம்ம்.. அண்ணே காவேரி போயிட்டு, கச்சதீவு போயிட்டு அணுவுலை வந்துட்டு இன்னும் என்னென்னமோ வந்துட்டு இதெல்லாம் திராவிட கட்சி அழிவு, தமிழ் தேசியம் வேணும்
சரி உங்ககிட்ட ஆட்சி கொடுத்தா என்ன செய்வீங்க
அண்ணே.. கேட்கவே நல்லா இருக்குண்ணே நடக்குமாண்ணே
அடேய் சொல்லு ஆட்சிய கிடைச்சா காவேரி பிரச்சினையில் என்ன செய்வீங்க?
ம்ம வழக்கு போடுவோம்ணே
கச்சதீவு பிரச்சினைக்கு?
டெல்லிக்கு சென்று வாதாடுவோம்ணே
அட அதைத்தானே இங்க எல்லோரும் செய்றாங்க , நீங்க என்னடா ஸ்பெஷலா செய்வீங்க
அண்ணே நாங்க மானஸ்தங்க, சரியான முடிவு கிடைக்கலண்ணா உடனே ராஜிநாமா பண்ணிருவோம்
ஓஓ.. திரும்ப தேர்தல் வைக்கணும், நீங்க வந்து ராஜினாமா பண்ணுவீங்க
அண்ணே நாங்க மானஸ்தங்க யார் கூடவும் கூட்டு வைக்க மாட்டோம், எந்த கட்சியும் ஆதரிக்கமாட்டோம்
டேய் டெல்லிக்கு எம்பியா போகணும்னா எப்படி?
அது போவோம்ணே இல்லாவிட்டால் எப்படி எங்க குரல் தெரியும்? போய் மிரட்டுவோம்ணே
அண்ணா மிரட்டாத மிரட்டலா நீங்க மிரட்டுவீங்க. திமுக கேட்காத கேள்வியினையா நீங்கள் கேட்டுருவீங்க
அண்ணே நாங்க வீரமா கேட்போம், மானமா கேட்போம்
கிடைக்கலண்ணா.. ராஜினாமா பண்ணுவீங்க
ஆமாண்ணே
அப்படி விளையாடிகிட்டே இருப்பீங்க
ஹிஹிஹி வேற வழி
இதுல எப்போ அரசு நடத்துவீங்க, எப்படி மாநிலம் இயங்கும் உங்க லட்சிய அரசு எப்படி நடக்கும்?
எப்படியாவது சமாளிப்போம்னே, அண்ணே ஈழத்துல நாடு அடையணும்ணே
அதுக்கு நீங்க இங்க இருந்து என்னடா செய்வீங்க
குரல் கொடுப்போம்
இங்க யாருடா கொடுக்கல, என்னடா நடந்துட்டு
அது யாரும் தமிழர் இல்லண்ணே, நாங்கதான் தமிழர் நாங்க சொன்னாதான் இலங்கைக்கு கேட்கும்
டேய் வரலாற்றை ஒழுங்காக படி திமுக பேசியதும் செய்ததும் தமிழ் தேசியம்தான். திமுக தோற்றது என சொல்வீர்கள் என்றால் உங்களுக்கும் தோல்விதான், திமுக தமிழ்தேசியம் வழி நடந்தது என்றால் நீங்கள் எதுக்கு வீணா, அதுனால தனிநாடு கேளுங்க
அய்யோ அடிச்சி பிரிச்சிருவாங்கண்ணே
இல்ல கொஞ்சுவாங்க, சும்மா கேளு
அதெல்லாம் ஏண்ணே, இந்தியா உள்ளேயே தமிழ் தேசிய இனத்துக்கு அதிகாரம் வேணும்ணே
இங்க அதுதானடா கிடைச்சிருக்கு, திமுக தமிழ்தேசியம் பேசாம என்னடா பேசிச்சி, அதோட போராட்டம் எல்லாமே தமிழ் தேசிய உரிமை நோக்கிதானடா மண்டையா , திமுக செஞ்சது, செய்றதுதானடா நீங்களும் செய்ய முடியும்? அதுக்கு மேல என்னடா செய்வீங்க…
ஆர்.கே நகர்ல ஜெயிச்சிட்டு அப்புறமா உங்கட்ட பேச வாரோம்ணே
ஆர்.கே நகரில் நாங்கள் வென்றால் கச்சதீவினை மீட்போம், காவேரி மீட்போம்னு சொல்வீங்களே
ஆமாண்ணே
அடேய் ஒரே ஒரு எம்.எல்.ஏ வச்சிகிட்டு எப்படிடா கச்சதீவினை பிடிப்பீங்க
அதெல்லாம் தெரியாது, எங்களுக்கு வேற பேச தெரியாதுண்ணே எங்கள விடுங்கண்ணே, அப்புறமா பேசுறேண்ணே…