அண்ணே தனி தமிழ்நாடுதான் தீர்வுண்ணே….

Image may contain: 2 people, people standing

அண்ணே தனி தமிழ்நாடுதான் தீர்வுண்ணே, அதுதான் இனி தமிழன் வாழ வழி

அப்படியா, ஆமாண்ணே

சரி தனியா பிரிஞ்சா என்ன செய்வீங்க?

முதல்ல சிங்களன அடிப்போம்ணே, தனியா ஈழம் வாங்குவோம்

அப்புறம்?

கன்னடனுக்கு அடிக்கிற அடியில தானே காவேரி வரும்ணே

அதுதான் இப்பொழுதே வருதே

நாங்க சொல்றது வருஷம் பூராவும்ணே

அப்புறம்?

ஒலிம்பிக்ல எல்லா பதக்கமும் தமிழ்நாட்டுக்குண்ணே, அப்படி பயிற்சி அளிப்போம், ஒலிம்பிக் இங்கேயே நடத்த வைப்போம்ணே

அப்புறம்?

எல்லாமே தமிழ்ணே, அமெரிக்க டாலருக்கு பதிலா வள்ளுவர் படம் போட்ட நோட்டுண்ணே

ஏண்டா பிரபாகரன் படம் இல்லியா?

ஹிஹிஹி அது நாங்க நிறைய நோட்டு அடிப்போம்ணே 50, 100, 1000ம்னு அதில எதிலியாவது போடுவோம்ணே

அப்புறம்?

விவசாயம் தேசிய தொழில், ஆடு மாடு தேசிய தொழில் எல்லாமே தேசியம்ணே

ஏண்டா இங்கேயே வடமாநிலத்தவன் தான் எல்லா வேலையும் செய்றான், நீங்க எல்லாம் தேசிய தொழில்ன்னா வேலை செய்றதுக்கு அவனுகளுக்கு விசா கொடுக்கணுமே

அட ஆமால்ல, இந்தியனுக்கு தமிழ்நாட்டுல வேலைவாய்ப்புண்ணு சொல்லிக்குவோம், தமிழ்நாடு சிங்கப்பூர் ஆக்குவோம்ணே

அப்புறம்?

இஸ்ரேல் மாதிரி தமிழ்நாடு உலகத்த ஆட்டும்ணே, அதனால நம்ம மொழிக்காக்க, இனம் காக்க தனிநாடு அவசியம்ணே

ஒஹோ, சரி தனிதமிழ்நாட்டுக்கு மொத்த வருமானம் எவ்வளவு வரும்?

அதெல்லாம் யாருக்குண்ணே தெரியும் எங்களுக்கு தேவை தனி தமிழ்நாடு

அதாண்டா, தனி தேசம்ணா ராணுவம் வேணும், வெளியுறவுதுறைண்ணு எல்லா நாட்டுக்கும் தூதரகம் திறக்கணும், இப்படி எவ்வளவு செலவு இருக்கு, நீங்க வேற ஊரெல்லாம் சண்டை போடனும்னு சொல்றீங்க‌

ம்ம் ஆமாண்ணே கண்டிப்பா

சொல்லு தமிழ்நாட்டு வருமானம் என்ன?

தெரியலண்ணே

ராணுவம் அமைச்சா அதுக்கு எவ்வளவு செலவு செய்யணும், ஒரு போர்விமான செலவு என்ன?

தெரியலண்ணே..

ஒலிம்பிக் தமிழ்நாட்டுல நடக்குமா? அதுக்கு எவ்வளவு செலவாகும்ணு தெரியுமா? கன்னடன அடிப்பியா? அது இந்தியாவில் இருந்தா மொத்த இந்தியாகூட யுத்தம் நடத்தணும்

அப்படியாண்ணே

பின்ன? இந்தபக்கம் இந்தியா, அந்தபக்கம் சிங்களம் சுத்தி அடிக்கணும், பெரிய ராணுவம் , பெரிய ஆயுதம் எல்லாம் வேண்டும்

ம்ம் இதெல்லாம் யாரும் சொல்லலண்ணே, இனி யோசிக்கனும்

அட அப்புறம் யோசி, முதல்ல தமிழ்நாட்டு மொத்த வருமானம் என்ன சொல்லு?

ம்ம் தெரியலண்ணே

இதுல உனக்கு தனிநாடு வெற ராஸ்கல்

ஹிஹிஹி

டேய் தமிழ்நாட்டு வருமானம் வங்கதேசத்தவிட குறைவு. தனி தமிழ்நாடு கிடைச்சாலும் 8 கோடி தமிழர்கள பராமரிக்கணும். இங்கேயே டாஸ்மாக்லதான் அரசு வாழுது இதுல எப்படி நீங்க மக்கள நடத்துவீங்க,

ம்ம் கஷ்டம்தாண்ணே

இருடா, கடல்கடந்து படையெடுக்கணுமில்ல அதுக்கு எங்க போவ‌

ம்ம் வரி போடுவோம்ணே

உண்டான வரிய கட்டுண்ணாலே கட்டமாடடிங்க, ஜிஎஸ்டி போட்டாலே அலறுவீங்க இதுல நீங்க கட்டுவீங்க‌

ம்ம் இப்படி எல்லாம் சிக்கல் வருமாண்ணே

பின்ன நாடுண்ணா என்ன நினைச்ச? உன் இஷ்டத்து ஆளலாம்ணா

அண்ணே விவசாயத்த தேசிய தொழில் ஆக்கணும்னே இப்படித்தான் நார்வே, டென்மார்க், சுவிஸ் எல்லாம் பணக்கார நாடா இருக்கு

ஏண்டா தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் எல்லாம் விவசாய நாடுதான் ஆனா ஐரோப்பா அளவுக்கா இருக்கு

இல்லியாண்ணே

அடேய் நார்வே எல்லாம் ஐரோப்பிய யூனியன்ல இருக்காங்க டா

அதுக்கென்ன தமிழ்நாட்டையும் ஐரோப்பிய யூனியன்ல‌ சேத்திருவோம்

அட கிரகம் பிடிச்சவன உன்ன வச்சி என்னடா செய்ய, உன்னெல்லாம் யாருடா பேச சொன்னது

எங்க அண்ணன் சீமான், செந்தமிழன்னே, அப்போ தமிழ்நாடு பிரிஞ்சா வல்லரசு ஆகாதாண்ணே

ம்ம், இந்த வங்கதேசம், மியன்மார், சில ஆப்ரிக்கநாடு மாதிரி நாசமா போகுமே தவிர வேற ஒண்ணும் நடக்காது, அப்படி ஆக்கிருவோமா?

கட்சில கலந்து பேசிட்டு வாரேண்ணே..”