அண்ணே நீங்க சங்கியாயிட்டீங்க
“அண்ணே பிராமணர் பத்தி உங்களுக்கு தெரியாது, ஒருத்தரையும் முன்னேற விடமாட்டாங்க , எல்லா வாய்ப்பையும் பறிச்சுட்டு நம்மளை அடிமையா வச்சிருவாங்க
பெரியார் யார்டா?
புரட்சியாளர், அவர் காலத்துல பிராமண அட்டகாசம் அப்படி
அது தெரியும், அவர் சொத்துமதிப்பு எவ்வளவு?
அண்ணே அவர் சொத்து அன்னைக்கே பல லட்சம் இப்போ ஏராளமான கோடிண்ணே
எல்லாம் எப்படி வந்தது?
உழைப்புண்ணே அவங்க அப்பா அப்படி உழைச்சார், பெரியாரும் நல்ல உழைச்சி சேத்துட்டுத்தான் வந்தாரு
டேய் கலைஞர் சம்பாதிக்கலையா?
ஆமாண்ணே அவர் உழைப்பாளின்னே
ஆக அந்த காலத்திலே உழைச்சி சொத்து சேத்துருக்காங்க
கண்டிப்பாண்ணே
இப்போதானடா பிராமணர் யாரையும் வாழ விடமாட்டங்கண்ணு சொன்ன, அவர் அவ்வளவு சொத்து பிராமணர் காலத்துலே சேர்த்திருக்க முடியதுடா எப்படிடா?
அதெல்லாம் உழைப்புண்ணே வேலை செய்யணும்
அதான் நாய நானும் சொல்றேன், பிராமணன நோண்டாம ஒழுங்கா வேலை செய், கஷ்பட்டு உழைச்சி பாரு. வாழ்க்கையில முன்னேறுவ, இல்ல இப்படித்தான் அழுதுட்டே இருப்ப போடா..
அண்ணே பிராமணன் யாரையும் படிக்கவிடமாட்டான்
ஏண்டா அண்ணா என்ன படிச்சாரு?
எம்.ஏ இரண்டு எம்.ஏ
அன்பழகன்?
அவரு பேராசிரியரு
இந்த நீதிகட்சி பன்னீர்செல்வம்?
அவரு அப்பவே வக்கீல் லண்டனுக்கு போனவரு
அவங்க எல்லாம் பிராமணனா? அவங்க எல்லாம் அந்த காலத்துலே படிக்கல?
அண்ணே நீங்க சங்கியாயிட்டீங்க, இனி உங்கட்ட பேசமாட்டோம்