அண்ணே நீங்க விஜயாகாந்த் பற்றி சொன்னது ரொம்ப சரி

அண்ணே நீங்க விஜயாகாந்த் பற்றி சொன்னது ரொம்ப சரி, சில நேரம் நீங்க சரியாத்தான் சொல்றீங்க‌

அப்படியா

ஆமாண்ணே அவர் தோற்றுபோயிருக்க கூடாது, அப்படி ஒரு ஆள் இருந்தா நல்லாத்தான் இருக்கும். தூத்துகுடியில அவர் ஜெயிச்சிருந்தா இந்த சிக்கல் வந்திருக்காது

ஓஹோ

ரொம்ப வருத்தம்ணே, சரி இப்படி அப்பப்போ எழுதுங்கண்ணே , நான் போறேன்

நில்லு இத கேட்டுட்டு போ

சொல்லுங்கண்ணே

விஜயகாந்த விரட்டிடீங்க, இன்னொருத்தங்க இருக்காங்க அவங்க விஜயகாந்தவிட 100 மடங்கு தைரியம், அவங்களையாவது ஜெயிக்க வச்சி உருப்படுற வழிய பாருங்க, இல்ல இப்படித்தான் பின்னாடி அழனும்

யாருண்ணே அது?

தலைவி குஷ்புடா

இதுக்குத்தான் உங்ககிட்ட பேசுறதே இல்ல, தூத்துகுடியில யாரையோ சுடுறாங்க, உங்கள சுட யாருமில்ல. ஒரு நாள் நானும் சுந்தர்.சியும் துப்பாக்கியோட வந்து சுட்டுருவோம்ணே. எனக்கே இவ்வளவு கோபம்ணா அவருக்கு எவ்வளவு இருக்கும்?, அதுக்குள்ள திருந்திருங்க”