அண்ணே மறுபடியும் பொய் சொல்றீங்க
அண்ணே மறுபடியும் பொய் சொல்றீங்க, காமராஜர் ரொம்ப உத்தமர், நல்லவர், தியாகி இந்த கருணாநிதிதான் அவர ஏமாத்தி தோற்கடிச்சாரு, அப்படியே தமிழ்நாட்டை நாசமாக்கிட்டாரு, அவரை பற்றி எல்லாம் எழுதாதீங்கண்ணே
ஒஹோ காமராஜர் நல்லவரு அப்படித்தானே?
இதுல எண்ணண்ணே சந்தேகம், அவர் ஆட்சி பொற்கால ஆட்சி
அவர் என்ன கட்சி
காங்கிரஸ்னே?
அது நல்ல கட்சியா?
என்னண்ணே இப்படி கேட்டுபுட்டீங்க, மத துவேஷம் இல்லாத இந்தியா ஒருமைபாட்ட காக்குற கட்சின்னே இந்த இந்துத்வா மாதிரி இல்ல
அப்போ காங்கிரஸ் ஆட்சிதான் வரணும்
வந்தா நல்லதுண்ணே
சரி அதுக்கு நீ என்ன முயற்சி பண்ணினே
இனிதான் பண்ணனும்
அடேய் நீ சைமன் தும்பில்ல
ஆமாண்ணே அதுக்கென்ன
டேய் காங்கிரஸ் ஈழ மக்களை கொன்ன கட்சிடா, முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்த கட்சிடா
அய்யோ ஆமாண்ணே மறந்துட்டேன் தமிழர் விரோத காங்கிரஸ் ஒழிக
இன்னொருக்கா சொல்லு
தமிழர் விரோத, தமிழர் உரிமை கொடுக்காத காங்கிரஸ் ஒழிக, அந்த காங்கிரஸ்தான் அமைதிபடை அனுப்பிச்சி , அந்த காங்கிரஸ்தான் ஈழம அமையாம தடுத்திச்சி, மோசமான கட்சி, தமிழன அதுக்கு பிடிக்கவே பிடிக்காது
ஆக காங்கிரஸ் தமிழருக்கு எதிரான கட்சி
கண்டிப்பாண்ணே
அடேய் இதத்தான் இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சின்னு அன்னைக்கே கலைஞர் சொன்னார், நீ இப்போ சொன்னா சரி, கலைஞர் அன்றைக்கே சொன்னால் தவறா
என்னனெண்ணே இப்படி குழப்பி விட்டீங்க
ஈழம், பிரபாகரன்னு அந்நிய நாட்டு தீவிரவாதி படம் பிடிக்கிற நீயெல்லாம் இந்திய தேசியவாதி காமராஜரை கலைஞர் தோற்கடிச்சிட்டாருன்னு பேசுற, உங்களுக்கு எதிரான காங்கிரஸை அவர் அன்னைக்கே தோற்கடிச்சாருடா
ஆமாண்ணே
அப்போ நீ திமுகவிற்கு நன்றி சொல்லணுமா வேண்டாமா?
ஒரு மண்ணும் புரியலண்ணே குழப்பமா இருக்கு, என்னண்ணே பண்ணுறது?
நேரே விருகம்பாக்கம் போ, அங்க மூலவியாதி வந்தவன் மாதிரி ஒருத்தன் கை, கால் எல்லாம் ஆட்டி ஆட்டி கத்திட்டு இருப்பான் அவன்கிட்ட போய் கேளு
அந்த ஆளுதாண்ணே எங்கள இப்படி ஆக்கிட்டாரு
முதுகில மிதிச்சி கேளு போடா..”