அண்ணே ரொம்ப சந்தோசபடாதீங்க, எங்க பிளானே வேற‌

Image may contain: 1 person, outdoor

அண்ணே ரொம்ப சந்தோசபடாதீங்க, எங்க பிளானே வேற‌

இதுல என்னடா பிளான், குற்றம் நிரூபிக்கபடலை அதனால் எல்லோரும் விடுதலைனு ஜட்ஜ் சொல்லிருக்காரு

அதெல்லாம் தெரியும்ணே, ஆனா இதுல இருக்குற விஷயம் உங்களுக்கெல்லாம் புரியாது, ரொம்ப தந்திரம்ணே

அட அப்படி என்னடா தந்திரம்

அண்ணே சசிகலா இருந்தா அதிமுக பலமாயிரும் அதுனால சரியா அந்தம்மா முதல்வர் ஆகுமுன்னால பிடிச்சி உள்ளே போட்டாங்க‌

டேய் அது குன்ஹா எழுதின தீர்ப்புடா, கன்பார்ம் பண்ணாங்க அவ்வளவுதான்

அது உலகத்துகுண்ணே உண்மையில பிளான் வேற, சசிகலா வெளிய இருந்தா அதிமுகவ அழிக்க முடியாது அதான் உள்ளே போட்டாச்சி, இப்போ கனிமொழியின வெளிய விட்டு திமுகவ அழிக்க போறாங்க‌

எப்படிடா?

அண்ணே கனிமொழி உள்ளே போயிட்டா ஸ்டாலினுக்கு போட்டிக்கு ஆள் இல்ல, அந்த அழகிரி உருப்படாதவரு. ஸ்டாலினுக்கு ஒரே போட்டி கனிமொழிதான் அதனாலதான் கனிமொழிய வெளியே விட்டிருக்கோம், இனி அண்ணனும் தங்கச்சியும் சண்ட போட்டு கட்சிய கெடுத்துருவாங்க, பாஜக தமிழ்நாட்டில ஆட்சிய பிடிச்சிரும்

இதெல்லாம் யார்டா சொன்னா?

அமித்ஷா பிளான்னே, ஊருக்குள்ள ரகசியமா பேசிக்கிறாங்க‌

கங்கை அமரன் உங்களுக்கு பயந்து ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் படுத்ததிலே உங்க ரகசியம் புரிஞ்சது போடா

அண்ணே எங்கள பத்தி உங்களுக்கு தெரியாது, நாங்க மாஸ்டர் மைன்ட் , அதிமுகவ கலைச்ச மாதிரி திமுகவினையும் விடமாட்டோம்

டேய் அதிமுக 1987லே அழிஞ்சிருக்க வேண்டியது, எப்படியோ 30 வருஷம் சசிகலா புண்ணியத்துல ஓடிட்டு, அத ஏண்டா நீங்க கலைக்கணும் தானா கலைஞ்சிருக்குமேடா

அண்ணே உங்களுக்கு புரியல, திமுகவ நாங்க என்ன செய்றோம்னு பாருங்க‌

டேய் அது நேரு காலத்தில இருந்து சொல்றதுடா, இஸ்ரேலை அரபு நாடுகள் ஒழிப்போம்ணு சொல்றதும் , நீங்க டெல்லில இருந்து திமுகவ ஒழிப்போம்ணு சொல்றதும் கால காலமா நடக்குறதுடா, ஆனா ஒண்ணும் ஆகாது

அண்ணே செஞ்சி காட்டுரோம்ணே

முதல்ல 234 தொகுதிக்கும் வேட்பாளர காட்டு பார்க்லலாம்

அண்ணே அப்புறமா வாரேண்ணே

அடேய் நில்லு சொல்லிட்டு போ , காலி நாற்காலிகிட்ட எல்லாம் பேசுற நாய்க்கு கொழுப்ப பாரு , ஒழுங்கா கட்சியவளக்கணும் ஆட்சிய பிடிக்கணும்னு என்னைகாவது யோசிக்கிறீங்களா?எவன் குடும்பத்தையாவது குழப்பனும்,அவன கொல்லனும் அவன் இடத்த பிடிக்கணும், மவனே உன்ன எல்லாம் சும்மா விட கூடாது

அண்ணே காலம் பதில் சொல்லும்ணே

நீ இந்த கல்லுக்கு பதில் சொல்லு, குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாதாமாதிரியே பேசுறது