அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன்
முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன் : ஸ்டாலின்
பின் எதற்கு அன்றைக்கு பட்டாவினை மட்டும் அவ்வளவு அவசரமாக வெளியிட்டார்?
மூல பத்திரம் கேட்டால் அதைமட்டும் ஆணையத்திடம் மட்டும்தான் கொடுப்பேன் என்பதெல்லாம் என்ன வகை?
பட்டா வெளியிட்டது போல் மூலபத்திரத்தையும் வெளியிட்டால் என்ன?
நாம் இதை அன்றே சொன்னோம் , பட்டாவினை காட்டி சிக்கலில் மாட்டுகின்றார் அன்னார் என்றோம், இதோ இன்று நடந்திருக்கின்றது.
ஸ்டாலினின் இயல்பான பதற்ற குணத்தை மிக அழகாக தூண்டிவிட்டு ஆடுகின்றார் ராம்தாஸ்., டல்பதி வசமாக அவரிடம் சிக்கிகொண்டார்.
“என் அப்பன் கட்டடம் பஞசமி நிலத்தில் இல்லை” எனும் புது மொழி இதுதான்