டேய்… நீ மனிதனா என்கின்றான் ஒருவன்
நேற்று அந்த கலைஞரின் அடக்க நிகழ்வில் முக ஸ்டாலின் அழுதார், முதல் முறையாக கண்ட அவரின் கண்ணீர் முகம் நெஞ்ச கலக்கத்தை ஏற்படுத்திற்று
அது காண பொறுக்கவில்லை என்பதை எழுத வந்து அது சகிக்கவில்லை என மாறிற்று, பிழைதான். ஆனால் வேகமாக எழுதும் பொழுது தெரியவில்லை
அதற்குள் டேய்… நீ மனிதனா என்கின்றான் ஒருவன்
உன் அப்பன் செத்தானே என குதிக்கின்றான் இன்னொருவன்
உன்னை இனி விடமாட்டோம் , மூஞ்சில் குத்துவோம் ஆசிட் வீசுவோம் என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றான்
இன்னொருவன் தும்பிகளை விட மோசமாக பேசிகொண்டிருக்கின்றான்
நாம் சொல்கின்றோம் அது வேகமாக எழுதியதால் மாறிய வார்த்தை என்றாலும் கண்டுகொள்ளவில்லை
உலக மகா மாபெரும் பொறுக்கிகள் பல திமுக உறுப்பினர், நான் இல்லாவிட்டால் திமுக இல்லை, அறிவலாயம் இல்லை என முகநூலில் சுற்றிகொண்டிருப்பது புரிந்தது
ஆனானபட அன்பழகன் கூட அப்படி நினைத்திருக்கமாட்டார்
இந்த மோசமான தும்பிகளின் பழைய வெர்சன் இந்த சில முகநூல் திமுகவினர்
போங்கடா டேய்…
தேசமே வந்து வணங்கியபொழுது இந்த பாமாகாவின் சின்ன , பெரிய மாங்காய்கள் சத்தமே இல்லை
ஏன் என்று தெரியவில்லை
ஜெர்மனியில் இருந்து திரும்பிய திருமுருகன் காந்தி கைது
அன்னார் பெரியார் கொள்கைகளையும், தமிழருக்கான திட்டங்களையும், இனவிடுதலையினையும் ஜெர்மனி, பிரிட்டன் போன்ற நாடுகளின் ஸ்டார் ஹோட்டல்களில்தான் வரைவார்
இம்முறை கொஞ்சம் கூடுதலாக வரைந்துவிட்டார் போலிருக்கின்றது சிக்கிவிட்டார்