அதற்கு அரசும், நாடும் இந்த தியாகத்தை செய்தே தீரவேண்டும்

No automatic alt text available.

தமிழகத்தில் பெரும் புள்ளிகள், பெரும் அந்தஸ்தில் உள்ளவர்களை அடையாளம் காண்பது எளிது, ஊரெல்லாம் படம் பத்திரிகையில் வந்திருக்கும், பத்திரிகைகள் எழுதியிருக்கும் அதற்கு மேல் அவர் வந்தால் பெரும் கூட்டமும், பேனர்களும் “அய்யா வாராக..” என்ற சத்தமும் “வாழ்க… வாழ்க ” என்ற கோஷங்களும் கேட்டுகொண்டே இருக்கும்

இதெல்லாம் இல்லாமல் எந்த பிரபலமும் வெளிவருவதில்லை, நடிகை கடை திறக்க வந்தாலும் இதே இம்சைதான்

இங்கெல்லாம் அப்படி அல்ல, எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் தங்க செயின் கூட இல்லை, மிக சாதாரணமாக வருகின்றார்கள், காரும் வீடும்தான் அவர்கள் அந்தஸ்தினை நிர்ணயிக்கின்றன, அதுவும் மார்கெட்டுக்கு செல்ல பழைய கார், அந்தஸ்தை காட்ட பென்ஸ் என வலம் வருகின்றார்கள்.

மிக பழைய காரில் வந்து இறங்கி, சாதாரண உடையில் 
நமக்கு அடுத்து டீ குடித்துகொண்டிருப்பவனிடம் பேச்சு கொடுத்தால் எனக்கு கப்பல் இருக்கின்றது என அசால்ட்டாக சொல்கின்றார், யார் எந்த அந்தஸ்து என புரியவே இல்லை

ஒரு மனிதரை அடிக்கடி பார்க்க முடியும் திடீரென காணாமல் போய்விடுவார், சர்ச்சில் மிக சாதாரண தோற்றத்தில் அமர்ந்திருப்பார், அய்யோ பாவம் கர்த்தாரகிய தேவனின் நற்செய்தியினை இவருக்கு சொல்லி நம்பிக்கை ஊட்டலாம் என பேசதொடங்கினால் அதிர்ச்சி காத்திருந்தது

அவர் பேச பேச “எனக்கு இன்னொரு பேர் இருக்க்கு…” என பாஷா ரஜினி சொல்லும்பொழுது எதிரில் இருப்பவருக்கு வியர்த்துகொட்டும் அல்லவா? அப்படி வியர்த்தது

ஆம், அவர் யுத்த விமானங்கள் கட்டும் ரஷ்ய கம்பெனியின் மிக பெரிய பதவியில் இருக்கின்றாராம். உலகின் அத்தனை விதமான யுத்த விமானங்களின் ஸ்குரு முதல் வேகம் வரை புட்டு புட்டு வைத்தார்

பேச்சு இந்தியாவில் சர்ச்சையாகும் ரபேல் விமானம் பக்கம் திரும்பியது

அவர் சொன்னார், “அது எங்களுக்கும் தெரியும், நாங்களும் கவனித்துகொண்டுதான் இருக்கின்றோம். அதன் அத்தனை விஷயங்களும் எங்கள் மேஜையில் உண்டெனினும் ரகசியங்களை சொல்ல முடியாது

ரபேல் விமானம் ஒன்றும் மிக பெரும் சக்திவாய்ந்தவை அல்ல, உங்கள் நாட்டில் ஏற்கனவே ரஷ்ய சுகோய் 30 வகைகள் உண்டு அவற்றின் பக்கம் இந்த ரபேல் வர முடியாது

இவ்வளவு பணம் கொடுத்து பிரான்ஸின் ரபேலை வாங்குவதை விட, இந்த பணத்திற்கு பிரிட்டனின் டைபூன் வைகளை வாங்கலாம், மிக பெரும் மிரட்டல் ரகம் அந்த விமான வகை

எவ்வளவோ வழிகள் இருக்க, எத்தனையோ நவீன விமானங்கள் இருக்க இந்தியா அவ்வளவு பிரயோசனமில்லா மித விமான வகை ரபேலை பிடித்து தொங்கும் விஷயம் தெரியுமா?

உலகின் மிக மிக பணம் கொட்டும் தொழில் ஆயுதம் செய்வது, அதுவும் யுத்த விமானம் கச்சா எண்ணெயினை விட அதிக பணம் கொட்டும் விஷயம்

அமெரிக்காவில், ரஷ்யாவில் ஐரோப்பாவில் தனியார் ஆயுத தொழிற்சாலை உண்டு, உங்கள் நாட்டில் உண்டா?

இல்லை, ஆனால் மேக் இன் இந்தியா என சொல்லி இவ்வகை விமானங்களை, ஆயுதங்களை இந்திய தனியார் நிறுவணங்களிடம் ஒப்படைக்கும் காரியம் அங்கு நடக்கின்றது, அப்படி ரபேல் விமானங்களை உங்கள் நாட்டில் தனியார் தயாரிப்பார்கள்

உங்களுக்கு கீழ் சில நாடுகள் உண்டல்லவா? இலங்கை, சில ஆப்ரிக்க நாடுகள் , வங்கதேசம் போன்றவை, அவற்றிற்கு விற்பார்கள்

பணம் கொட்டோ கொட்டு என இனி அவர்களுக்கு கொட்டும்

அமெரிகாவிம் ஸ்டைரிஸ், பிரிட்டனின் டைபூன்களை எல்லாம் விட்டுவிட்டு ரபேல்தான் வேண்டும் என இந்தியா அடம் பிடிப்பது இதனால்தான்” என்றார்

ஓஓஹோ அம்பானி கச்சா எண்ணெயிலும், பாலிஸ்டரிலும் சம்பாதித்திவிட்டு இப்பொழுது யுத்த விமானத்திலும் சம்பாதிக்க போகின்றாரா? குரு அவருக்கு உச்சம் போல என நினைத்துகொண்டேன்

அவர் தொடர்ந்தார்

உங்கள் நாட்டில் எத்தனையோ செயற்கை கோள்களை செய்கின்றீர்கள், எத்தனய்வோ ஏவுகனைகளை செய்கின்றீர்கள்

ஆனால் ஏன் சொந்தமாக யுத்த விமானம் கட்டமாட்டேன் என்கின்றீர்கள்?

எச்.ஏ.ல் நிறுவணம் ஒன்றும் மோசமானது அல்ல, பெரும் வித்தகர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். அரசு முயற்சித்தால் பிரிட்டனின் டைபூனை விட அமெரிக்காவின் எஃப் 117 விட அட்டகாசமான விமானம் தயாரிக்க முடியும்

ஆனால் அதனை செய்யாமல் என்னவெல்லாமோ செய்கின்றார்கள் ஏன்?”

அது அவருக்கு புரிந்ததோ இல்லையோ நமக்கு புரிந்தது, மிக துல்லிய ஏவுகனைகளை , கிரையோஜெனிக் எஞ்சின்களை செய்ய்யும் நாடு ஒரு யுத்த விமானம் கட்ட முடியாதா?

கட்டலாம், நிச்சயம் கட்டலாம்

ஆனால் அப்படி செய்தால் அம்பானி எப்படி மிகபெரும் பணக்காரர் ஆவது? கச்சா எண்ணெய் நாடுகளின் சுல்தானை விட பெரும் பணக்காரர் அவர் ஆகவேண்டும் என்றால் அவர் யுத்தவிமானம் தயாரித்தே தீரவேண்டும்

அதற்கு அரசும், நாடும் இந்த தியாகத்தை செய்தே தீரவேண்டும்