அதிமுகவினர் மீது ஊழல் புகார் தெரிவிப்பது யாரென்றால் அவர்களேதான்
இப்பொழுதெல்லாம் அதிமுகவினர் மீது ஊழல் புகார் தெரிவிப்பது யாரென்றால் அவர்களேதான்
பன்னீர் பழனி கோஷ்டி மீது தினகரன் கோஷ்டியும், தினகரன் மீது இந்த கோஷ்டியும் அள்ளிவிடும் ஊழல் புகார் ஏராளம்
இப்பொழுது செந்தில் பாலாஜி மீது அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல்புகார் தெரிவித்துள்ளார்
வசமாக சிக்கிய இடத்தில் சிக்ஸர் அடிக்க வந்துவிட்டார் ராமதாஸ் “ஏம்பா நீ அமைச்சர்தானே அந்த ஆளு ஊழல் பண்ணியிருந்தா வழக்கு போடலாமே..” என களத்தில் இறங்கிவிட்டார்
டாக்டர் ராமதாஸின் தற்போதைய அசைவுகளை கண்டால் அவர் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவது தெரிகின்றது. திராவிட கட்சிகளுடன் நீல வானமும் சூரியனும் இருக்கும் வரை கூட்டணி இல்லை என சவால் விட்டிருப்பதால் இனி தேசிய கட்சிகளுடன் மட்டும் இணைவாராம்
தேர்தலை குறிவைத்து இனி ராமதாஸின் குரல் அதிகமாக இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
இனி ஆளாளுக்கு பொங்குவார்கள், ஆனால் இந்த மு.க ஸ்டாலின் என்பவர் மட்டும் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பிடிப்பார் போலிருக்கின்றது