அதிமுக கட்டுகோப்பினை கலைஞர்தான் காத்திருக்கின்றார்
எவ்வளவு பெரும் படையாக இருந்தாலும் பொது எதிரி இருக்கும் வரைதான் ஒன்றாய் இருக்கும், வெற்றி கிடைத்தால் தங்களுக்குள் மோதுவார்கள்
இது அலெக்ஸாண்டர் காலத்திலே இருந்து அவனும் தன் அரசை எல்லாம் பிரித்துகொடுத்துவிட்டுத்தான் செத்தான், வரலாறெங்கும் இந்நிகழ்வு காண கிடக்கின்றது
ஈழப்போரில் கூட சமாதான காலத்தில் புலிதளபதிகளுக்குள் சண்டை வருகின்றது, போர்தொடங்காமல் இந்த சண்டை தீராது என்றுதான் அவசரபட்டு பிரபாகரன் சண்டை தொடங்கி புலிகள் அழிந்தனர்
இந்த இந்தியா கூட முன்பு பிரிட்டனுக்கு எதிராக பொங்கி அவன் சென்றதும் தங்களுக்குள் அடிக்க தொடங்கிற்று
ஒரு பொது எதிரி இருக்கும்வரைதான் கூடிய கூட்டத்தை கையில் வைத்திருக்க முடியும். அவ்வகையில் எதிரி என்பவன் மகா முக்கியம்
இதில் அதிமுக மட்டும் விதிவிலக்கா?
ராமசந்திரன், ஜெயா காலங்களில் கலைஞரை எதிர்த்தே அரசில செய்தார்கள். இன்று அவர் இல்லாத காலங்கள் என்பதால் அவர்களுக்குள்ளே அடிக்கின்றார்கள்
பழனிச்சாமி அணி, பன்னீர் தனி, தினகரன் மணி, இப்பொழுது திவாகரன் கோஷ்டி என பல பிரிவுகள் இதனிடையே தீபா காமெடி வேறு
ஆக இந்நாள்வரை அதிமுகவினை காத்தது ராமசந்திரனும் அல்ல, ஜெயாவும் அல்ல, சசிகலாவும் அல்ல நடராஜனும் அல்ல
உண்மையில் அதிமுக கட்டுகோப்பினை கலைஞர்தான் காத்திருக்கின்றார்
இன்று அவர் நலமாய் இருந்தாலும் அவரை எதிர்க்கவாவது ஒன்றாய் இருந்த்திருப்பார்கள், உண்மை
ஆக இதுகாலம் கலைஞரால் கட்டுபாடாய் இருந்திருக்கின்றது அதிமுக, அவர்கள் நன்றியுள்ளவர்கள் என்றால் அடுத்த அணி தொடங்கும்பொழுது” கலைஞர் அணி” என தொடங்கட்டும்
நிச்சயம் அந்த நன்றிக்கு 4 வோட்டு கிடைக்கும்