அதிமுக 46ம் ஆண்டுவிழா கொண்டாட்டம்

அதிமுக 46ம் ஆண்டுவிழா கொண்டாட்டம்

இனி ஜென்மத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்துகொண்ட அதிமுகவினர் இப்பொழுதெல்லாம் கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டனர்

மரத்தின் உச்சிக்கு சென்ற குரங்கு , இறங்கும் முன் கிளையினை ஆட்டுவது போல் ஆட்டிகொண்டிருக்கின்றனர்

ஜெயா செத்து இரு மாதம் கூட நிறைவடையா நிலையில் ராமசந்திரன் நூற்றாண்டு விழா என ஒரே அழிச்சாட்டியம், இப்பொழுது 46ம் ஆண்டு விழாவாம்

கவனியுங்கள் கட்சி தொடங்கி 46 வருடம் ஆயிற்று, அது தொடங்கபட்ட 5 வருடத்தில் ஆட்சிக்கு வந்தது , ராமசந்திரன் 11 வருடம் ஜெயா 16 வருடம் , ஜாணகி, நெடுஞ்செழியன், பன்னீர் எடப்பாடி கணக்குகளை எல்லாம் சேர்த்தால் கிட்டதட்ட 30 வருடம் ஆகின்றது

ஆக 30 வருடம் தமிழகத்தை ஆண்ட கட்சி அதுதான், மிக அதிக காலம் தமிழகத்தை ஆண்ட கட்சி, ஆண்டு கொண்டிருக்கும் கட்சியும் அதுதான்

ஆனால் அதிமுக அரசின் அடையாளம் என, வெற்றி என ஒரு விஷயத்தை தமிழகத்தில் காட்ட முடியும்?

ஒன்றுமில்லை மாறாக எல்லாம் ஊழல், சிக்கல், பெரும் அவமான அரசியல்

46 ஆண்டுகால அதிமுக உருவாக்கியது என்ன என பார்த்தால், ராமசந்திர உடையாரின் சாம்ராஜ்யம், ஜேபிஆர் மற்றும் ஐசரி வேலனை கல்வி தந்தையாக்கியது அது போக உச்ச சாதனை சசிகலா, தினகரன், திவாகரன், வெங்கடேஷ் , சுதாகரன் , விவேக் என பலரை உருவாக்கியது

46 வருட சாதனை இதுதான். மாநில முதல்வரும் அவருக்கு அடுத்து முதல்வராக துடித்தவரும் குற்றவாளி என தீர்பிடபட்ட கட்சி இது, அதுதான் மிகபெரும் சாதனை

வரலாறு காணா ஊழல், வன்முறை கூவத்தூர் குடகு காட்சிகள் என மிக கொடிய ஆட்டம் போட்டது அவர்கள் சாதனையின் சிகரம்.

ஐதரபாத், சிறுதாவூர், கொடநாடு என வரிசையாக அரண்மனை கட்டியதை விட இக்கட்சி என்ன செய்தது?

மக்களுக்காக உருப்படியான திட்டமோ, ஒரு போராட்டமோ நடத்திய கட்சி அல்ல அது. ஒரு உரிமையும் அது காத்திருக்காது, கலைஞர் எதிர்ப்பு டெல்லி விசுவாசம் என்றே காலம் தள்ளிய கட்சி அது.

இப்பொழுது 46ம் வருடம் என இவர்கள் சொல்வது அதுதான், 30 வருடம் ஆண்டும் உருப்படியாக ஒன்றும் செய்யாத, இனி செய்ய அறவே வாய்ப்பே இல்லாத கட்சி நாங்கள் என சொல்லிகொள்கின்றார்கள்

கொஞ்சம் சிந்த்தித்தாலே இந்த கட்சி கொண்டாட்டம் பக்கம் வரமாட்டார்கள், ஆனால் இவர்கள் என்று சிந்தித்தார்கள்? அதனால் வந்துவிட்டார்கள்

46 ஆண்டுகாலம் அவர்களின் அஸ்திரமான இரட்டை இலை இப்பொழுது முடக்கபட்டிருக்கின்றது

4 கோஷ்டிகளாக சிதறி நிற்கின்றார்கள்

50ம் ஆண்டு பொன்விழா வருவதற்குள் எஞ்சியிருப்பதும் அழிந்து, மிக சுத்தமாகட்டும்

இந்த நாடக கம்பெனி ஒழிவதுதான் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் பெரும் விமோசனம்