அதி தீவிர ஆயுத சண்டை அமெரிக்காவிற்கு ரஷ்யாவிற்கும் தொடங்கியது
இங்கே நடக்கும் பாஜக தமிழக கட்சிகள் சண்டையினை விடுங்கள், அதி தீவிர ஆயுத சண்டை அமெரிக்காவிற்கு ரஷ்யாவிற்கும் தொடங்கியாயிற்று
மிக வேக ஏவுகனைகளை தாங்கள் தயாரித்ததாக ரஷ்யா சொல்ல, ஏவுகனையோ விமானமோ எவ்வளவு வேகம் என்றாலும் லேசர் கதிர்களால் தாக்கி அழிக்கும் நுட்பம் எங்களிடம் உண்டு என காட்டியது அமெரிக்காவின் பெண்டகன்
இப்படி பெண்டகன் அறிவித்த இரு நாட்களில் தன் மாபெரும் ஆயுதமான சாத்தானை அறிமுகபடுத்திவிட்டது ரஷ்யா
ஆம் சர்மாட் ரக ஏவுகனைகளை மேம்படுத்தி சாத்தான் வெர்சன் 2 என அட்டகாசமாக மிரட்டுகின்றது ரஷ்யா
சாத்தான் என்ன செய்யும்?
200 டன் எடையுள்ள ஆயுதங்களை சுமந்து கொண்டு உலகின் எந்த மூலையினையும் வேகமாக சென்று தாக்கும் திறன் கொண்டது
உண்மையில் இது மிகபெரிய எடை, மற்ற நாட்டு ஏவுகனைகள் கொண்டுசெல்லும் எடையினை விட இது மகா மகா அதிகம்
இதனை புட்டீன் அறிவித்த மறுநொடி உலகம் அரண்டு கிடக்கின்றது
ஒரு முடிவோடுதான் இருக்கின்றார் புட்டீன், தொட்டுபார் என அவர் மிக தைரியமாக சண்டைக்கு தயாராக நிற்பதை கண்டு அஞ்சுகின்றது உலகம்
ரஷ்யா தன் ஆயுதத்தை மேம்படுத்தியும், அதிநவீன போர் உத்திகளையும் நடத்தியதால் என்னாயிற்று என கேட்டால் விஷயம் உண்டு
சிரியாவில் இருந்து அமெரிக்கா நடையினை கட்டும் என அறிவித்துவிட்டார் டிரம்ப். ஆம் இனி அமெரிக்க ராணுவம் வெளியேறுமாம்
நிச்சயம் வியட்நாம் யுத்தத்திற்கு பின் அமெரிக்காவிற்கு இது மாபெரும் தோல்வி, சிரியாவில் ஆட்சி கவிழ்ப்பு செய்யவந்த அமெரிக்கா பயங்கர தோல்வியுடன் வெளியேறுகின்றது
ஈராக்,ஆப்கன் என வெற்றிபெற்ற அமெரிக்காவிற்கு ஏன் சிரியாவில் வெற்றிபெற முடியவில்லை
ரஷ்யா அவ்வளவு தீவிரமாக களத்தில் நின்றது, இப்பொழுது புட்டீன் அதி நவீன ஆயுதங்களை சோதிக்க தோல்வியுடன் வெளியேறுகின்றது அமெரிக்கா
சுருக்கமாக சொன்னால் ரஷ்யாவிற்கு அஞ்சி பின்வாங்கிற்று
இதற்குத்தான் உலகில் எல்லா சக்திக்கும் எதிர்சக்தி வேண்டும் என்பது அப்பொழுதுதான் சமநிலை கிடைக்கும்
ஒரு சக்திக்கு எதிர் சக்தி இல்லா நிலை இருந்தால் என்னாகும்? சந்தேகமே இல்லை தமிழக அரசியல் போலாகும்
இங்கு ஆளும் கட்சியும் குப்பை எதிர்கட்சி அதைவிட மகா மோசம், இதனால் மகா மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது தமிழ்நாடு.