அதீத பொய்
அடேய் பொய் சொல்லலாம் ஆனால் அதீத பொய் சொன்னால் நாக்கு அழுகிவிடும்
திமுக பரப்பும் பொய்யில் முதலாவது சென்னை மாகாணம் தமிழகம் என பெயர்மாற்ற சங்கரலிங்கனார் செத்தார் காமராஜர் கண்டுகொள்ளவில்லை
இந்த மொழிவாரி பிரச்சினைக்கு முதலில் செத்தது பொட்டி ஸ்ரிராமலு எனும் தெலுங்கர், மொழிவாரி மாநிலம் வேண்டும் என முதலில் பட்டினி கிடந்து அவர்தான் செத்தார்
காமராஜர் அதில் கனத்த அமைதி, அப்பொழுது அமைதியாக இருந்துவிட்டு சங்கரலிங்கனாருக்கு இறங்கி வந்தால் என்னாகும்?
தமிழனுக்கு காமராஜர் இறங்கினார் என தெலுங்கர் வாய்விட்டு சிரிப்பர், அதைவிட முக்கியம் நாடாரான சங்கரலிங்கத்துக்கு தவித்துவந்தார் காமராஜர் என சாதிமுலாம் பூச பசும்பொன் தேவர் பார்த்துகொண்டிருந்தார்
காமராஜர் சங்கரலிங்கனாரை கண்ணீரோடு தவிக்க விட்டது இதனால்தான்
இரண்டாம் விஷயம் குடகு மலை தமிழகத்தோடு இணைய விரும்பியதாம் காமராஜர் தடுத்துவிட்டு கன்னியாகுமரி வாங்கினாராம் இதனால் காவேரியில் காமராஜர் துரோகம்செய்தாரம்
குடகு மலை கூர்க் இன மக்கள் கன்னடரோடு இணையாமல் அதில் தமிழகத்தோடும் இணையாமல் தனி மாநிலம் காண விரும்பினர், அதற்காக போராடினர்
ஆனால் மிகசிறிய பகுதி என்பதாலும் இன்னும் பல காரணங்களுக்காகவும் அவர்களுக்கு மாநில அந்தஸ்து மறுக்கபட்டது
மிக சிறிய பகுதியான கூர்க் தனிமாநிலம் ஆகியிருந்தாலும் மைசூரை தாண்டி எப்படி காவேரி இங்கு வரும்? இவர்கள் அறிவு அவ்வளவுதான்
அதுவும் போக தேவிகுளம் பீர்மேட்டை விட்டுவிட்டு கன்னியாகுமரியினை ஏன் இணைத்தார்? இது நாடார் பாசம் என்கின்றார்கள்
காமராஜர் விருதுநகர் நாடார், கன்னியாகுமரி நாடார்களுக்கும் அவர்களுக்கும் ஆகாது விஷயம் அதுவல்ல
பீர்மேடு தேவிகுளத்தை ஒப்பிடும்பொழுது கன்னியாகுமரி பரப்பில் பெரிது அதைவிட முக்கியம் அங்கு விளையும் நெல்லும் இன்னும் பல பொருட்களும்
அந்த விளைச்சல்தான் காமராஜருக்கு சரியென பட்டதே தவிர சாதி அல்ல..
“விருதுநகரில் விலை போகா மாடு ஒன்று வடசேரி சந்தைக்கு வந்திருகின்றது” என அந்த பெருமகனை மட்டமாக பேசிய கட்சியின் வாரிசுகள் எப்படி இருப்பார்கள்?
இப்படித்தான் இருப்பார்கள்
அவர்களுகாக காமராஜரின் செருப்போடு காத்திருக்கின்றோம்..