அது அவனை தவிர யாருக்கும் சாத்தியமில்லை

“எனக்கு நீங்கள் எல்லோரும் எப்படியோ அப்படித்தான் அன்பு தம்பி கருணாநிதியும், கடலில் பிரிவில்லை கழகத்தில் பேதமில்லை

ஆனால் மற்ற தம்பிகளிடம் இல்லா சிறப்பான குணம் ஒன்று அவனிடம் உண்டு ஏன் என்னிடம் கூட அக்குணம் இல்லை

நமக்கெல்லாம் கனவு வரும், கனவு இருந்தால் முயற்சி வரும் அந்த முயற்சி வெற்றியில் முடிந்தால் மகிழ்வோம் தோல்வியில் முடிந்தால் தளர்வோம்

தம்பி கருணாநிதிக்கு கனவுகள் அதிகம் அதற்கெற்ற உழைப்பும் அதிகம், ஆனால் ஒருவேளை தோற்றுவிட்டால் அதை ஜீரணத்து உடனே மீண்டுவரும் சக்தி மிக மிக அதிகம். எந்த தோல்வியும் அவனை பாதிக்காது

அது அவனை தவிர யாருக்கும் சாத்தியமில்லை. அந்த குணமே அவனை தனிமைபடுத்தி காட்டுகின்றது, கழகத்தை மென்மேலும் உயர்த்துகின்றது”