அது என்ன கானாபாடல் சர்ச்சை?
அது என்ன கானாபாடல் சர்ச்சை?
அம்மாதிரி பாடல்களை முதலில் தொடங்கி வைத்தது சந்திரபாபு “குங்குமபூவே” போன்ற பாடல்கள் அந்த ரகம்.
“என்ன நைனா நாஷ்டா துன்னியா” என வந்து நிற்பார் எம்.ஆர் ராதா, அவருக்கும் சில பாடல்கள் உண்டு எனினும்
சென்னை தமிழை சோ ராமசாமி தவிர யார் சரியாக பேசினார்கள் பாடினார்கள்?
“வா மச்சான் வூட்டாண்ட நீ வராங்காட்டி நா விடமாட்டேன்,
ஜாம் பஜார் ஜக்கு, நா சைதா பேட்டை கொக்கு”
என அன்றே பாடிய மனோரமாவும் சோ ராமசாமியுமே அவ்வகை தொடங்கியவர்கள் . ,
“இஸ்கு இஸ்க்கு இஸ்துமே..” என அவர் ஏராளமான பாடல்களை அன்றே சென்னை ஸ்டைலில் கொடுத்தார் சோ ராமசாமி
பின்னாளைய “சிங்காரி சரக்கு” எனும் கமல் பாடல் எல்லாம் அதன் தொடர்ச்சி
இலங்கை தமிழில் கூட சுராங்கணி, சின்ன மாமியே போன்ற பாடல்கள் வந்தன, துள்ளிசை பாடல் என அவர்களே பெயரும் வைத்தார்கள்
தேவா வந்து அவர் பாணியில் கொடுக்க பின் கானா எனும் அடையாளத்தோடு அது வந்தது, “கானா” ஒன்றும் அந்நிய மொழி அல்ல, “கானம்” என்றால் பாடல் , கானா என சென்னை அதனை திரித்து வைத்திருந்தது
இப்படி உண்மை இருக்க, அந்த ரஞ்சித் என்பவர் கானா பாடலை தான் கொண்டுவந்ததாக சொல்லிகொண்டிருக்கின்றார்
ரஜினி கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது, இல்லாவிட்டால் அவரை மலேசியாவில் நான் தான் அறிமுகபடுத்தினேன், நான் இல்லாவிட்டால் ரஜினியினை அங்கு யாருக்கும் தெரியாது என சொன்னாலும் சொல்வார்
ரஞ்சித் ஆபத்தானவர், சென்னை என்பது அவர்களின் நகரம் போலவும், மற்றவர்கள் எல்லாம் சென்று அதனை அபகரித்தது போலவும் பேசிகொண்டிருப்பவர்
“எங்க ஊரு மெட்ராஸு, இதுக்கு நாங்க தானே அட்ரசு” என்ற வரிகள் எல்லாம் சும்மா அல்ல
பொறுத்து பாருங்கள், மிக பெரும் சர்ச்சைகள் எல்லாம் இந்த நபரால் நிச்சயம் ஒருநாள் வரும்.