அது என்ன மூன்றாம் கருப்பு தமிழன்?
ரஜினியினை அவர் ரசிகர்கள் எப்படி தூக்கிவிட்டார்களோ, அப்படியே அவரை அதல பாதாளத்திலும் இழுக்க துணிந்துவிட்டார்கள்
இல்லாவிட்டால் இப்படி எல்லாம் கட் அவுட் வைப்பார்களா?
முன்பு காந்திக்கும் காமராஜருக்கும் இடையில் சிவாஜி படத்தை வைத்து அதற்கு உரையாற்ற ஜெயகாந்தனை அழைத்தார்கள், தனக்கே உரித்தான ஸ்டைலில் சீறினார் அவர்
“இப்பக்கம் காலா காந்தி அப்பக்கம் காந்தி இடையில் ஏன் ஒரு சனியனை வைத்திருக்கின்றீர்கள்? இப்படித்தான் திமுகவில் ஒரு சாத்தானை வளர்த்தார்கள் அது தமிழ்நாட்டை சீரழித்துகொண்டிருக்கின்றது”
இப்பொழுது நல்ல வேளையாக ஜெயகாந்தன் இல்லை
அது என்ன மூன்றாம் கருப்பு தமிழன்?
(ஓமந்தூர் ராமசாமி, ராஜா குமாரசாமி போன்ற முதல்வர்களை இவர்களுக்கு தெரியவில்லை, ரஜினி ரசிகர்கள் அல்லவா அப்படித்தான் இருப்பார்கள்)
இது என்ன புதுவில்லங்கம்?
அப்படியானால் பன்னீர்செல்வம் என்றொரு கருப்பு நெருப்பு தமிழன் முதல்வராக இருந்ததையே இருட்டடிப்பு செய்கின்றார்களா? அவர் நடத்திய தர்மயுத்தத்தை எல்லாம் மறக்கடிக்கின்றார்களா?
ஜல்லிகட்டினை அவர் மீட்ட வீரகாவியங்களை எல்லாம் மறைக்கின்றார்கள்
இது பழனிசாமி கோஷ்டியின் அட்டகாசமாக இருக்கலாம்
இந்த படத்தை பார்த்து ரஜினி என்ன நினைப்பாரோ தெரியாது, ஆனால் பழனிச்சாமி நிச்சயம் மகிழ்வார்
ஆம் அவர் கருப்பு இல்லை என்றாகிவிட்டது அல்லலா, இனி அருகிலிருப்பவர் “அய்யா நீங்க எம்ஜிஆர் மாதிரி தகதண்ணு மின்னுராதால உங்க பேரை விட்டுட்டாங்க” என சொன்னால் பழனிச்சாமி அப்படியே குளிந்துபோக மாட்டாரா?
ரஜினிக்கு ஏதும் உண்மை ரசிகர்கள் இருந்தால் இந்த கட் அவுட் வைத்த நபரை பிடித்து செய்ய வேண்டியதை செய்தால் ரஜினிக்கு நல்லது