அது நிச்சயம் மோடியின் வெற்றி, உறுதியாக சொல்ல முடியும்.

மோடியின் திட்டம் தோல்வி, கள்ள‌ பண ஒழிப்பு தோல்வி, ஜிஎஸ்டி கொண்டுவந்ததில் அதிருப்தி என பல குரல்கள் எழுகின்றன‌

ஜிஎஸ்டி என்பது காங்கிரசால்தான் வரையறுக்கபட்டது, இன்று காங்கிரஸ் அரசு தொடர்ந்திருந்தாலும் அது வந்திருக்கத்தான் செய்யும்.

அதே நேரம் ஜிஎஸ்டியால் பல பொருட்கள் விலை குறைந்திருப்பதை பற்றி யாரும் பேசவே இல்லை. அது கவனிக்க வேண்டியது.

ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கியதில் இந்திய பொருளாதாரம் படுத்துவிட்டது என்கின்றார்கள். உண்மையில் எந்த தொழில் படுத்திருக்கின்றது என்றால் எதெல்லாம் கள்ள கருப்பு பணத்தில் நடந்ததோ அதெல்லாம் படுத்திருக்கின்றது

கவனித்துபார்த்தால் அவர்கள்தான் கத்துகின்றார்கள், பொருளாதாரம் போயிற்றேன்று ஒப்பாரி வைக்கின்றார்கள்.

ஆக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கருப்பு பணம் அந்த அளவு விளையாடி, ஒரு ஊதிபெருக்கபட்ட பிம்பம் இருந்திருப்பது தெரிகின்றது.

அந்த பிம்பம் உடைந்து, உண்மை உருவம் தெரியும்பொழுது மோடி கெடுத்துவிட்டார் எனும் கூக்குரல் பெரும் கருப்பு சக்திகளிடம் இருந்து கேட்கின்றன.

நிச்சயம் நாட்டுக்கு தேவையானதைத்தான் மோடி செய்தார், அதில் பல ஊதிபெருக்கபட்ட பலூன்கள் உடைந்து கொண்டிருக்கின்றன.

இந்திய பொருளாதார உண்மை முகம் வெளிதெரிகின்றது, அதுதான் உண்மை.

அது நிச்சயம் மோடியின் வெற்றி, உறுதியாக சொல்ல முடியும்.