அந்தனன் ஷன்முகம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சுவாரஸ்யமான எழுத்து என்பது பத்திரிகை உலகில் மிக சிலருக்கே வரும், அதிலும் வலிக்காமல் அடிப்பது என்பதும் ஒரு கலை, மிக மிக பக்குவபட்டவர்களுக்கே அது பயிற்சியாகும்
அப்படிபட்ட மிக சுவாரஸ்யமான எழுத்தாளர் Anthanan Shanmugaஅவர்கள், அவர் நடத்தும் www.newtamilcinema.com பத்திரிகையும், அந்த வலைப்பேச்சு வீடியோக்களும் அவ்வளவு சுவாரஸ்யமானவை
சினிமா செய்திகளை அவரை விட்டால் உண்மையாக, தெளிவாக அதே நேரம் சிரிக்க சிரிக்க சொல்ல ஆளே இல்லை
உண்மையில் அதெல்லாம் மகா சிரமமான எழுத்துக்கள், ஒரு வார்த்தை மிஞ்சினாலும் வில்லங்கம், ஒருவார்த்தை குறைந்தாலும் சுவாரஸ்யம் கெட்டுவிடும்
அதனை மிக லாவகமாக கொண்டு செல்கின்றார் என்பது ஆச்சரியமானது.
அட்டகாசமான பழமொழிகளையும் உள்ளே புகுத்துவார்
மனிதரிடம் மிக பிடித்த விஷயம், சினிமா உலகின் உட்குத்து முதல் பல விஷயங்களை நேர்மையாக எழுதுவார்
விமர்சனங்களில் கூட யாரும் கவனிக்காத நல்ல படங்களை வெளிச்சம் போட்டு கொடுப்பது அவரே, அதே நேரம் எந்த நட்சத்திரம் நடித்திருந்தாலும் குப்பை படங்களை போர்ஸ்மார்ட்டம் செய்வதும் அவரே
அவர் விமர்சனம் எழுதியபின்புதான் இப்பொழுதெல்லாம் படம் பார்க்க கிளம்புவது என முடிவுசெய்திருக்கின்றேன்
மனிதரிடம் எப்பொழுதும் ஒரு வருத்தம் உண்டு
அட்டகாசமான எழுத்தும், வார்த்தைகளும் அவருக்கு வரம், ஆனால் சினிமாவினை தாண்டி வராமல் அதற்குள்ளேத்தான் எழுதுவேன், பேசுவேன் , வாழுவேன் என அடம்பிடித்து கொண்டிருக்கின்றார்
சினிமாவினை அவ்வளவு நேசிக்கின்றார், நடிகனாக, இயக்குநராக அல்ல ஒரு எழுத்தாளனாகவும் சினிமாவினை நேசிக்க முடியும் என நிரூபித்துகொண்டிருக்கின்றார்
அவ்வகையில் அவர் சினிமா தவயோகி, ஏதோ ஒரு கதையில் விவேகானந்தர் சொல்லும் காவல் கிளி.
இந்த மரத்தைவிட்டு எங்கும் செல்லமாட்டேன் என அதன் உச்சியிலே தங்கி இருக்கும் கிளி
அன்னாருக்கு இன்று பிறந்த நாள்
அவர் இன்னும் நிறைய எழுதவும், சினிமா செய்திகளையும் அதன் வரலாற்றையும் நிரம்ப எழுதவும் நல்ல படங்களை அடையாளம் காட்டவும் வாழ்த்துக்கள்
பிறந்தநாளில் அவரை வாழ்த்திவிட்டு அவரிடம் வைக்கும் கோரிக்கைகள் சில உண்டு, சங்கம் என்ன கோரிக்கை வைக்கும்?
அய்யா அந்த “குஷ்பு நமஹ” தொடர்பற்றி தலைவி ஏதும் சொன்னாரா?
உங்கள் வலைபேச்சில் தலைவி எப்பொழுது கலந்து கொள்வார்?
இது போன்ற கேள்விகளை எழுப்புகின்றோம், பிறந்த நாள் கொண்டாடிவிட்டு பதில் சொல்லவும்
அண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், எல்லா தெய்வங்களும் அவரை ஆசீர்வதிக்கட்டும்
இனிவரும் நாட்கள் அவருக்கு வளமானதாய் அமையட்டும்