அந்த ஆரல்வாய்மொழி கண்ணுபொத்தை … இன்னும் பிற…
அந்த ஆரல்வாய்மொழி கண்ணுபொத்தை செய்திகளை கேட்க கேட்க பெரும் அதிர்ச்சியாய் இருக்கின்றது
தமிழக ஊடகங்கள் இன்னும் அதுபற்றி சொல்லாததுதான் பெரும் கொடுமை, டெல்லி நிர்பயா கொடூரத்தை எல்லாம் தூக்கி வீசும் கொடூரம் இங்குதான் நடந்திருக்கின்றது
காணாமல் போன பெண்களின் உறவினர்கள் கொடுத்த தகவலில் சில விசாரணை அப்பக்கம் திரும்புகின்றது, ஆனால் பிச்சைகாரிகளை கூட இந்த சைக்கோ கும்பல் விடவில்லை என செய்தி, ஆனால் அவர்களை பற்றி புகார் கொடுக்கபோவது யார்?
அப்படியானால் நிகழ்ந்திருக்கும் கொடூரத்தின் வலி என்ன? எத்தனை காலம் இது தொடர்ந்திருக்கின்றது…
மானிட இனத்தையே நடுங்கவைக்கும் விஷயமும், இளம் தலைமுறை எங்கே செல்கின்றது என்ற பெரும் அச்ச கேள்வியும் வருகின்றன
ஆனால் தமிழக ஊடகங்கள் வழக்கம் போல அமைதி, அஜித் பட விளம்பரத்தில் கடும் பிசி
இவ்வளவு நடந்தும் ஒரு பத்திரிகையிலும், டிவியிலும் மூச்சே இல்லை
ஸ்டாலின் மிக நல்லவராம், பாஜகவிற்கு சங்கடம் ஏற்படுத்த கூடாது எனும் மகா நல்ல எண்ணத்தில்தான் பாஜகவினை அழைக்காமல் இருக்கின்றாராம், இப்படி புளகாகிதம் அடைகின்றனர் சிலர்
அப்படிபட்ட மகா நல்லவர் அதிமுகவிற்கு “சங்கடம்” கொடுக்காமல், அழகிரிக்கும் “சங்கடம்” கொடுக்காமல் ஓடிவிடும் வாய்ப்பு இருக்கின்றதல்லவா? அப்படி நடக்காமல் பார்த்துகொள்ளுங்கள் உபிக்களே..
இனி ஸ்டாலின் ஜெயின் துறவியாகி எறும்புக்கும் “சங்கடம்” கொடுக்காமல் விசிறியபடி நடக்கும் காட்சியினை தமிழகம் விரைவில் பார்க்கலாம்
ஒரு புத்தகத்தை பார்த்து அப்படியே எழுதினால் “கள்ள காப்பி” என கத்துவார்கள்..
இது என்ன பிரமாதம்? அவர் தான் ஏற்கனவே எழுதிவிட்டாரே? நீ ஏன் அதனையே எழுதவேண்டும்? பைத்தியமா என்பார்கள்,
அது பைத்தியகாரதமான வேலையும் கூட..
ஆனால் ஒரு சினிமா பாடலை, யாரோ அமைத்த இசையினை யாரோ எழுதிய வரிகளை யாரோ எழுதிய பாடலை இவர்கள் மேடைகளில் அப்படியே எத்தனை முறை பாடினாலும் கச்சேரி, இசைமழை, இன்னபிற என பாராட்டுகின்றார்கள்
எங்கு திரும்பினாலும் இந்த இசை இம்சைகள் தாளவில்லை, எல்லாம் யாரோ மெட்டு போட்டு யாரோ பாடிய பாடல்கள் , ஒன்றும் புதிதல்ல..
இளையராஜா சொன்னதிலும் அர்த்தமிருக்கலாம்..
சிடியில் அந்த பாடலை கேட்டால் தீர்ந்தது விஷயம், அவர்களை போலவே பாட அவர்கள் போதாதா?
இவர்கள் எதற்கு?
ஒரு புத்தகத்தை பார்த்து அப்படியே எழுதினால் “கள்ள காப்பி” என கத்துவார்கள்..
இது என்ன பிரமாதம்? அவர் தான் ஏற்கனவே எழுதிவிட்டாரே? நீ ஏன் அதனையே எழுதவேண்டும்? பைத்தியமா என்பார்கள்,
அது பைத்தியகாரதமான வேலையும் கூட..
ஆனால் ஒரு சினிமா பாடலை, யாரோ அமைத்த இசையினை யாரோ எழுதிய வரிகளை யாரோ எழுதிய பாடலை இவர்கள் மேடைகளில் அப்படியே எத்தனை முறை பாடினாலும் கச்சேரி, இசைமழை, இன்னபிற என பாராட்டுகின்றார்கள்
எங்கு திரும்பினாலும் இந்த இசை இம்சைகள் தாளவில்லை, எல்லாம் யாரோ மெட்டு போட்டு யாரோ பாடிய பாடல்கள் , ஒன்றும் புதிதல்ல..
இளையராஜா சொன்னதிலும் அர்த்தமிருக்கலாம்..
சிடியில் அந்த பாடலை கேட்டால் தீர்ந்தது விஷயம், அவர்களை போலவே பாட அவர்கள் போதாதா?
இவர்கள் எதற்கு?