அந்த நாடகத்தை இப்பொழுதும் நடத்துகின்றது
தமிழ் தமிழ் என முழங்குபவர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் என்ன கிழித்தார்கள் என்பதுதான் தெரியவில்லை
தமிழை வளர்க்க வேண்டுமென்றால் என்ன செய்திருக்க வேண்டும் சைவ சித்தாந்த கழகம் விட்டு சென்ற பணிகளை திராவிட மற்றும் திமு கழகம் செய்திருக்க வேண்டும்
ஆனால் செய்யவில்லை ஏன்? அப்படி செய்தால் தமிழனின் மதம் இந்து என பண்டைய இலக்கியங்கள் சொல்வதை உறுதிபடுத்தபடும் என்பதால் தயங்கி மறைத்தார்கள்
சரி, ஆந்திரமும் கன்னடமும் மலையாளமும் இந்தியினை எதிர்க்கவில்லை ஆனால் சொந்தமொழியினை காத்தன
இங்கு இந்தியும் வளரவில்லை, ஆங்கிலமும் வளரவில்லை அட தமிழும் வளரவில்லை
தமிழ் வாழவேண்டும் வளரவேண்டும் என இவர்கள் நினைத்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் தெரியுமா?
ஒரு இந்தியனாக அதை சொல்லமுடியாது என்றாலும் நியாயத்தை சொல்லவேண்டும்
ஆம், ஈழபோராட்டத்தை இவர்கள் வெற்றிபெற செய்திருக்க வேண்டும், ஈழபோராட்டம் தமிழருக்கானது மட்டுமல்ல தமிழ் மொழி உலகிலே தனி ஆட்சி மொழியாக மலரும் வாய்ப்பு அங்குதான் இருந்தது
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருந்தாலும் தனி தமிழ்நாடாக ஒரு நாடு மலரமுடியுமென்றால் அது ஈழபூமியாக இருந்தது
இவர்கள் அதை ஆதரித்திருக்க வேண்டும் ராஜிவ் கொலைக்கு முன் தலைகீழாக நின்றவர்கள் அதற்கு பின் அப்படியே ஜகா வாங்கினார்கள்
ஈழம் அமையாது என உறுதியாக சொன்ன பாஜகவோடும், காங்கிரஸோடும் கூட்டணி வைத்து பதவியில் அமர இவர்களுக்கு தயக்கமே இல்லை
நல்லவர்கள் என்றால் தமிழ்மேல் பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்றால் அந்த ஈழபோராட்டத்தில் இவர்கள் நின்றிருக்க வேண்டும்
அப்படி செய்தால் ஈழம் மலர்ந்து தமிழ் இன்னும் வளர்ந்திருக்கும்
வாழ விட்டார்களா அந்த தமிழை?
அல்ல இவர்கள் ஆட்சியும் அதன் வருமானமும் இவர்களுக்கு முக்கியமாக இருந்தது
தமிழ்பற்றாளர்கள் என்றால் கடல்கடந்தும் தமிழ் வளர இருந்த வாய்ப்பினை இவர்கள் விட்டிருக்க கூடாது
ஆனால் விட்டுவிட்டார்கள் ஏன்?
எல்லாம் சுயநலம் நாடகம் வோட்டு தமிழ் அரசியல்..
அந்த நாடகம் மறுபடியும் தொடர்கின்றது
இந்தி வந்தால் தமிழ் அழியும் என்பார்கள் ஆனால் அது வந்த மாநிலங்கள் எதிலும் மாநில மொழி அழிந்ததாக தெரியவில்லை
இல்லா ஒன்றை இருப்பதாக சொல்லி படம்காட்டி பயமுறுத்தி வாக்கு வாங்கி சம்பாதிப்பதில் தன்னிகரற்ற கட்சி திமுக
அந்த நாடகத்தை இப்பொழுதும் நடத்துகின்றது