பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அந்த பெயரை மொத்தமாக அழிக்க வந்திருக்கும் படம் காலா

Image may contain: sky and outdoor

மும்பை அன்று சிறு தீவுகள் தொகுப்பு, மராட்டிய அரசர்களிடமிருந்து போர்த்துகீசியர் கைக்கு சென்றது

பின்பு ஏதோ ஐரோப்பிய அரச திருமண‌ சம்பந்த விவகாரத்தில் அது பிரிட்டனுக்கு வந்தது, பிரிட்டன் அந்த மீன்பிடி தீவினை வணிக மையமாக மாற்றியது

பம்பாய், ஹாங்காங், பினாங் எல்லாம் வெள்ளையனின் அந்த வகையறா.

மராட்டிய பகுதியில் பருத்தி அபாரமாக விளைய மும்பையில் மில்கள் வந்தன, அதற்கு தொழிலாளர்கள் தேவைபட்டனர்

மில் முதலாளிகள் எல்லாம் பார்சி, குஜராத்திவம்சம் என்றே இருந்தது

1900களிலே தென்னகத்தில் விவசாயம் சாக ஆரம்பித்தது, அப்பொழுதே மக்கள் பல இடங்களுக்கு நகர்ந்தார்கள், அப்படி பலர் சென்ற இடம்தான் பம்பாய்

நிச்சயமாக சொல்லலாம் அந்த பம்பாய் தென்னகத்தில் ஊருக்கு பல வீடுகளுக்கு சோறு போட்டது, அவ்வளவு மக்கள் குடியேறினர்

தாராவி, செம்பூர் போன்ற பகுதிகள் அவர்கள் ஏரியா ஆனது

அரேபிய பகுதியில் பெட்ரோல் கிடைத்தபின் மும்பையின் வளர்ச்சி எகிறியது, பெரும் வணிகசந்தை ஆனது. அங்கிருக்கும் தமிழர்களும் ஓரளவு முன்னேறினர்

சிக்கல் எங்கு வந்தது என்றால் கடத்தல் பேர்வழிகள் வடிவில் வந்தது. ஹாஜி மஸ்தான் என்பவர் கடத்தலில் கொடிகட்டி பறந்தார், அது போக வியாபார உலகமும் இஸ்லாமிய பார்சி கைகளில் இருந்தது

பால்தாக்கரே முதன் முதலில் மண்ணின் மைந்தர் கோஷத்தை அங்கு எழுப்பினார், மராட்டிய எழுச்சி அவரால் தொடங்கபட்டது சந்தேகமில்லை

கடத்தல் உலகமும், வியாபார உலகமும் சில இஸ்லாமியர் கையில் இருந்ததால் அவரால் இஸ்லாமியருக்கு எதிரான சிவசேனையினை நடத்த சிக்கலே இல்லை, பெரும் சக்தியாக உருவாக்கினார்.

ஹாஜி மஸ்தானின் கீழ் பல அடியாட்கள் உருவாகினர், அவர்களில் ஒருவர்தான் வரதராஜ முதலியார்

வரதர் ரவுடியாக உருவாகவும் பல காரணங்கள் இருந்தன‌

பால்தாக்கரேயின் இஸ்லாமிய கோபம் வரதராஜர் மேலும் திரும்பிற்று, தமிழர் இஸ்லாமியரோடு கை கோர்த்து மராட்டிய பூமியில் ஆட்டம் போடுவதாக கணித்தார், தமிழர் மேல் பாய்ந்தார்

தமிழர்கள் 24 மணி நேரத்தில் பம்பாயினை காலி செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார், தமிழருக்கு எதிராக மும்பையில் எழுந்த ஒரே மிரட்டல் அது

அதன் பின் வரதராஜ முதலியார் சீற இருவருக்கும் முட்டிகொண்டது. ஆனால் வரதராஜ முதலியாரின் சீற்றமே பால்தாக்கரேயினை யோசிக்க வைத்து நிதானிக்க வைத்தது

நிச்சயம் வரதராஜ முதலியார் ரவுடி, சந்தேகமில்லை ஆனால் பின்னாளில் தமிழர் ஆதரவு எடுத்து தான் அவர்கள் அனுதாபி தான் இல்லை என்றால் தமிழர் மும்பையில் வாழமுடியாது என காட்டிகொண்டார்

பிரபாகரனின் புலிகள் கூட வரதரின் பாதுகாப்பில் மும்பையில் தங்கிய காலம் உண்டு, அந்த அளவு அவரின் அதிகாரம் இருந்தது

வரதராஜரின் கீழ் பல சிறு ரவுடிகளும் இருந்தனர், ஒரு சில நல்ல தலைவர்களும் இருந்தனர்

பின் சவான் எனும் அதிகாரியின் அதிரடியில் வரதரஜர் மும்பையில் நுழையமுடியாதபடி சென்னைக்கு விரட்டபட்டார்

மும்பையின் காட்சிகளும் மாறின, தமிழருக்கு பெரும் ஆபத்து இல்லை, இன்றுவரை இல்லை

மும்பை கலவரம் குண்டுவெடிப்பிற்கு பின் தாவுத் மும்பையில் இல்லை, பால் தாக்கரேவும் இல்லை

இன்று தமிழரும் அடுத்த தலைமுறையில் தமிழே தெரியாமல் மும்பை குடிமக்களாகவே ஆகிவிட்டனர்

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் அங்கு தமிழர் குடியேறிகள் ஆனால் அம்மண் அவர்களை அரவணைத்து கொண்டது, பால் தாக்கரே காலத்தை தவிர ஒரு சிக்கலும் அங்கு இல்லை

சிவசேனையும் மும்பையினை உருவாக்க பாடுபட்ட இனம் என தமிழரை அரவணைத்தே செல்கின்றது

இந்த வரதராஜ முதலியார் கதையினை ஏற்கனவே மணிரத்னம் அட்டகாசமாக எடுத்திருந்தார், சில சினிமாதனம் உண்டே தவிர நிறைய நிஜம்

அந்த ஆம்புலன்ஸ் சமாச்சாரம், ஒரு பாட்டி தீயினை கொளுத்தி சாகுதல் எல்லாம் உண்மை சம்பவம்

நாயகன் படம் வரலாற்றில் நிற்கின்றது என்றால் வரதராஜரையும் அச்சூழலையும் மணிரத்னம் கவனித்து வளர்ந்தவர், அதனால் அவரால் அற்புதமாக அப்படத்தை செதுக்க முடிந்தது

ரஜினியின் பாஷா எல்லாம் கட்டுகதை, ஆனால் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் அது

அந்த பெயரை மொத்தமாக அழிக்க வந்திருக்கும் படம் காலா


பைத்தியம் பாரிசாலன் என்பவரை தாக்கிவிட்டார்களாம்

அவன் வீடியோவினை பார்த்தால் நமக்கே அடிக்கத்தான் தோன்றும், அவ்வளவு இம்சை. ஆனால் பாவம் மனநல சிகிச்சை தேவைபடுபவனை யார் அடிப்பர்?

மனநோயாளியினை தாக்கிய அந்த கும்பல் யாரென தெரியவிலை

இனியாவது பாரிசாலனை நல்ல மனநல மருத்துவமனையில் சம்பந்தபட்டவர்கள் சேர்க்கட்டும்

 


 

 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications