அந்த பேராசிரியையின் புரோக்கர் பேச்சு இந்த ஆட்சியில் வெளிவந்தது

அந்த பேராசிரியையின் புரோக்கர் பேச்சு இந்த ஆட்சியில் வெளிவந்தது

இப்பொழுது பழனிசாமி அரசு என்பதால் யார் அந்த விஐபி, ஹையர் அத்தாரிட்டி என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் யாருக்கும் இல்லை

எவனாய் இருந்தால் என்ன என விட்டுவிட்டு அந்த பேராசிரியினை போட்டு சாத்திகொண்டிருக்கின்றார்கள்

திமுக மட்டும் இப்பொழுது ஆட்சியில் இருந்திருந்தால் செயல் தலைவரை இழுத்துபோட்டு ஆளாளுக்கு கதைகட்டியிருப்பார்கள்

அதுவும் சன்னிலியோன் வீடியோக்களே தோற்றுபோகும் அளவு கற்பனையில் பல செய்திகளை அவர்களாக கலந்துகட்டி அடிப்பார்கள்

திமுக எதிர்கட்சி ஆனதும் நல்லதற்காகத்தான் இருந்திருகின்றது


விஷயம் அணல் அடிக்கின்றது, அன்புமனி கூட அந்த தேவாங்கூர் கல்லூரி தேவாங்கு வன்னியர் இல்லை என உறுதிபடுத்தியபின் களத்திற்கு வந்துவிட்டார்

ஆனால் புலனாய்வு புலி பத்திரிகைகள், ஊடகங்கள் இன்னபிற எல்லாம் அம்மணிக்கு ஒரு நெருக்கடியும் கொடுத்ததாக தெரியவில்லை

தன்னிலை விளக்கம் கூட கொடுக்கவில்லை , அது நான் பேசியது அல்ல என் அட்மின் பேசியது என்ற வழக்கமான பம்மல் கூட இல்லை

அவ்வளவிற்கு தமிழக நிலை சென்றாயிற்று

கல்வி அமைச்சர் என்பவர் யார்? அவர் என்ன செய்துகொண்டிருக்கின்றார்

எங்கோ பாத்ரூமை எல்லாம் ஆய்வு செய்த ஆளுநர் தாத்தாவினை பல்கலைகழக பெயர் அடிபடும் இந்த சர்ச்சையில் காணவே இலை